Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 4 பிரச்சினை இருப்பவர்கள் தலைக்கு எண்ணெய் வைக்கக்கூடாதாம்... இல்லனா முடி மொத்தமா போயிருமாம்...!
முடி ஆரோக்கியம் என்பது இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய கவலையாக மாறிவருகிறது. முடிக்கு எண்ணெய் தடவுவது ஆரோக்கியமான முடி நடைமுறைகளுக்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. பிரபல இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம் முடி ஆரோக்கியத்தை பரிந்துரைக்க பரிந்துரைக்கும் முக்கியமான செயல் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதாகும்.
இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு நம் தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் அவை வலிமையாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இருப்பினும், வெவ்வேறு வகையான முடிகளுக்கு உச்சந்தலையில் வெவ்வேறு முடி பராமரிப்பு தேவை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது எப்போதும் நல்ல பலன்களை தருவதில்லை. ஏனெனில் சில பிரச்சினை உள்ளவர்கள் உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது அவர்களின் முடி ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பொடுகுத்தொல்லை
தலையில் பொடுகு இருந்தால் எண்ணெய் தடவாதீர்கள் குறிப்பாக உச்சந்தலையில் தடவக்கூடாது. இது உங்கள் முடியின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய தீங்காகும். பொடுகு என்பது தற்போது மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாகும், மேலும் இது உச்சந்தலையின் தோலை உரிக்கச் செய்கிறது.
தலையில் உள்ள பொடுகு மலாசீசியா எனப்படும் பூஞ்சையால் ஏற்படுகிறது, இது உண்மையில் உங்கள் உச்சந்தலையில் உள்ள எண்ணெயை உண்கிறது, எனவே நீங்கள் உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவினால், அது அதன் மேலும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
முகத்தில் பருக்கள்
உங்கள் முகத்தில் அல்லது நெற்றியில் முகப்பரு இருந்தால், எண்ணெய் மேலும் துளைகளை அடைத்து முகப்பருவை மோசமாக்கும். உங்கள் தலைமுடி எண்ணெய் நிறைந்ததாக இருந்தால், எண்ணெய் உங்கள் முகத்தில் கசிந்து முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, உங்கள் நெற்றி, முகம் மற்றும் முதுகில் கூடுதல் எண்ணெய் வராமல் இருக்க, தினமும் உங்கள் தலைமுடியை அலசுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உச்சந்தலையில் கொப்புளங்கள்
கொப்புளங்கள் ஃபுருங்கிள் என்றும் அழைக்கப்படுகிறது. மயிர்க்கால்களிள் ஏற்படும் பாக்டீரியா தொற்று இந்த பிரச்சினையை ஏற்படுத்துகிறது, இது சுற்றியுள்ள திசுக்களையும் பாதிக்கும். உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். உங்கள் உச்சந்தலையில் கொப்புளங்கள் இருக்கும்போது, அதில் எண்ணெய் வைக்கும்போது, அது அதிக அழுக்குகளை ஈர்க்கும் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும்.
எனவே, உங்கள் உச்சந்தலையில் கொப்புளங்கள் இருக்கும் போது எண்ணெய் தடவுவதைத் தவிர்க்க வேண்டும் மேலும், உங்கள் உச்சந்தலையில் கொப்புளங்கள் நீண்ட காலமாக இருந்தும், குணமடையவில்லை என்றால், மருத்துவரை அணுகுவது நல்லது.
எண்ணெய்ப்பசை கொண்ட உச்சந்தலை
உங்கள் தலைமுடி ஏற்கனவே எண்ணெய் நிறைந்ததாக இருக்கும் போது, மீண்டும் உச்சந்தலையில் எண்ணெய் வைக்கும் போது, உச்சந்தலையில் தூசி சேகரிக்கவும், எரிச்சலை ஏற்படுத்தவும் மற்றும் பிற உச்சந்தலை பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இது கடுமையான முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கும்.
ஏற்கனவே எண்ணெய் மூடியிருக்கும் உங்கள் உச்சந்தலையில் கூடுதல் எண்ணெயைச் சேர்ப்பதற்குப் பதிலாக, மிகக் குறைவாகத் தொடங்கி, படிப்படியாக உங்கள் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வது நல்லது. சில வாரங்களுக்கு ஒருமுறை, உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் எண்ணெயை சேர்க்க முயற்சிக்கவும். இது வேலை செய்தால், ஒவ்வொரு வாரமும் முயற்சிக்கவும்.



Click it and Unblock the Notifications
