Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
நீங்க தூங்கும்போது செய்யும் இந்த தவறால்தான்... உங்களுக்கு முகப்பரு ஏற்படுகிறதாம்...இனிமே அதை செய்யாதீங்க!
பொதுவாக, தலையணையில் நாம் முகத்தை வைப்போம். இதனால், தலையணை உறையில் இருக்கும் பாக்டீரியாக்கள் சருமத்தில் பரவி, முகப்பருவை உண்டாக்குகிறது.
பெரும்பாலான மக்கள் முகப்பரு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இதில், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே! முகப்பருவை யாரும் நிச்சியமாக விரும்ப மாட்டார்கள். அதனால், முகப்பருவைத் தடுக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், அது எப்போதும் முகத்தில் தோன்றும். அடுத்த நாள் உங்களுக்கு ஒரு முக்கியமான நாளாக இருந்தாலோ அல்லது ஒரு பெரிய நிகழ்வில் கலந்து கொண்டாலோ, உங்கள் முகத்தில் முகப்பரு இருப்பது உங்கள் மனநிலையை முற்றிலும் பாதிக்கலாம். நீங்கள் அழகாக தோற்றமளிக்காதது போல நினைக்கலாம். மன அழுத்தம் முதல் ஆரோக்கியமற்ற உணவு, தோலில் கடுமையான இரசாயனங்கள் பயன்படுத்துவது வரை, முகப்பரு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் முகப்பருவைத் தூண்டும் ஒரு விஷயம் உள்ளது, அதை நாம் அனைவரும் புறக்கணிக்கிறோம்.

நாம் தூங்கும் முறை நமது தோலின் நிலையை பாதிக்கிறது மற்றும் உண்மையில் முகப்பருவை ஏற்படுத்தலாம். சருமத்தை பராமரிப்பதற்கு இரவு நேரமே சிறந்த நேரம்; தோல் மீட்கப்பட்டு புத்துணர்ச்சி பெறுகிறது. இருப்பினும், சில தவறுகள் உங்கள் சருமத்திற்கு முற்றிலும் தீங்கு விளைவிக்கும் மற்றும் காலையில் முகப்பருவை ஏற்படுத்தும். நீங்கள் தூங்கும்போது செய்யும் அந்த தவறுகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

தலையணை உறையை மாற்றவில்லை
பயன்படுத்திய துணிகளை துவைப்பது உங்கள் வேலைகளில் ஒரு பகுதியாக இருப்பதைப் போலவே, தலையணை உறைகளை அடிக்கடி துவைப்பதும் மாற்றுவதும் மிகவும் அவசியம். தலையணை உறைகளில் அழுக்கு மற்றும் மாசுக்கள் படிந்துள்ளன. அவை கட்டமைக்கும் அடுக்குகளைக் கொண்டுள்ளன. பொதுவாக, தலையணையில் நாம் முகத்தை வைப்போம். இதனால், தலையணை உறையில் இருக்கும் பாக்டீரியாக்கள் சருமத்தில் பரவி, முகப்பருவை உண்டாக்குகிறது. எனவே முகப்பருவைத் தடுக்க வாரத்திற்கு ஒருமுறை தலையணை உறையை மாற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேக்கப்புடன் தூங்குவது
இரவு நேரங்களில் அல்லது நள்ளிரவில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய பிறகு, நாம் அனைவரும் படுக்கையில் விழ விரும்புகிறோம். ஆனால் மேக்கப்பை அகற்றாமல் தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேக்கப் இரவு முழுவதும் இருப்பது உங்க சரும துளைகளை அடைத்து, முகப்பருவை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், மென்மையான மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்தி மேக்கப்பைச் சுத்தம் செய்த பின்னர் தூங்குங்கள்.

குப்புறப்படுத்து தூங்குவது
இது சற்று வினோதமாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் குப்புறப்படுத்து தூங்குவது முகப்பருவை ஏற்படுத்தும். இது போன்ற நிலையில் நீங்கள் தூங்கும் போது, உங்கள் சருமம் தலையணை உறையுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறது. இதனால், இரவு முழுவதும் உங்கள் தோலுக்கும் தலையணை உறைக்கும் இடையே உராய்வு இருக்கும். எனவே, நீங்கள் முகப்பருவைத் தவிர்க்க விரும்பினால், குப்புறப்படுத்து தூங்குவதைத் தவிர்க்கவும்.

இரவு முழுவதும் முடி எண்ணெய் பயன்படுத்துதல்
முடி எண்ணெய்கள் முடிக்கு சிறந்தது. ஆனால் அவை உங்கள் தோலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தலையில் ஹேர் ஆயில் தடவிக்கொண்டு இரவில் தூங்கக்கூடாது. ஏனெனில் இரவு முழுவதும் எண்ணெய் கசியும், அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் முகப்பருவை ஏற்படுத்துகிறது. உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்க விரும்பினால், சூடான எண்ணெய் மசாஜ் செய்து, இரண்டு மணி நேரம் வைத்திருந்து முடியை அலசுங்கள்.

முகத்தை சரியாக சுத்தம் செய்யவில்லை
நீங்கள் மேக்அப் செய்யாவிட்டாலும், உங்கள் சருமம் நாள் முழுவதும் அழுக்குகளை உருவாக்குகிறது. உங்கள் மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன் மற்றும் மாசுபாடு ஆகியவை உங்கள் துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்தும். எனவே இரவில் தூங்கும் முன் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது அவசியம். மேலும், உங்கள் சருமத்தில் ஃபேஸ்வாஷைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் உங்கள் கைகளை சரியாகக் கழுவுங்கள். முகப்பருவைத் தடுக்க இரட்டை சுத்திகரிப்பு முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் முகத்தை அழுக்கு துண்டால் தேய்த்தல்
உங்கள் சருமத்திற்கு சரியான க்ளென்சரையும், உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதற்கான சரியான வழியையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் தோலில் அழுக்கு துணி அல்லது துவைக்கும் துணியைப் பயன்படுத்தினால், அது முகப்பருவை ஏற்படுத்தும். முகப்பருவைத் தவிர்க்க துண்டுகள் அல்லது துவைக்கும் துணிகளை அடிக்கடி கழுவி மாற்ற வேண்டும். ஏனெனில் அவை பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் ஆகும். முகப்பரு இல்லாத சருமத்தை உறுதிப்படுத்த, 2-3 துண்டுகளை கைவசம் வைத்து, உறங்கச் செல்லும் முன் மாற்றாகப் பயன்படுத்தவும்.



Click it and Unblock the Notifications











