Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
நீங்க வீட்டில் 'இப்படி' செய்யும் பப்பாளி ஃபேஷியல்.... உங்க சருமத்தை பப்பாளி போல ஜொலிக்க வைக்குமாம்!
பப்பாளி ஃபேஷியலுக்கான மூன்றாவது படி மசாஜ் ஆகும். இது முகத்தின் அனைத்து செல்களையும் செயல்படுத்துகிறது மற்றும் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்க உதவுகிறது.
அழகான பொலிவான சருமத்தை பெற, நீங்கள் இயற்கை வழிகளை முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், இது உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. உங்கள் சருமத்தை பராமரிக்க பல இயற்கை பொருட்கள் உள்ளன. அவற்றை நீங்கள் வீட்டிலேயே பயன்படுத்தி பொலிவான ஒளிரும் சருமத்தை பெறலாம். அந்த வகையில், தோல் பராமரிப்புக்கான ஃபேஸ் பேக்குகளைப் பற்றி பேசும் போதெல்லாம், பப்பாளி எப்போதும் நினைவுக்கு வரும் ஒரு பழம். பப்பாளி நம் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பப்பாளி வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், இயற்கையான மற்றும் நீடித்த பளபளப்பையும் தருகிறது.

நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய பப்பாளி ஃபேஷியல் மூலம் வறண்ட மற்றும் மந்தமான சருமத்திற்கு குட்பை சொல்லுங்கள். இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து இயற்கையான பொலிவை தரும். இக்கட்டுரையில் வீட்டில் பப்பாளி ஃபேஷியல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பப்பாளி ஏன் நம் சருமத்திற்கு நல்லது?
பப்பாளியில் உள்ள சத்துக்கள், முகப்பருவைக் கட்டுப்படுத்துவதோடு, சுருக்கங்களையும் குறைக்க உதவுகிறது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி, பப்பாளி சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் காயங்களை நீக்குவதற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் பப்பாளியில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக முகத்தில் வயதான அறிகுறிகள் தெரியமால் உங்களை இளமையாக வைத்திருக்க பப்பாளி உதவும்.

சுத்தப்படுத்துதல்
எந்தவொரு பராமரிப்பின் முதல் படி சுத்தப்படுத்துதல் ஆகும். உங்கள் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கை தோலில் இருந்து அனைத்து தூசி, அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்குகிறது மற்றும் தோல் பொருட்கள் நன்றாக வேலை செய்ய முடியும். உங்கள் முகத்தை சுத்தப்படுத்த, ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது பால் எடுத்து உங்கள் முகத்தில் தடவவும். 10 நிமிடம் சுத்தம் செய்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இது தவிர ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தலாம்.

ஸ்க்ரப்பிங்
ஸ்க்ரப்பிங் என்பது இந்த ஃபேஷியலின் இரண்டாவது படியாகும், இதன் காரணமாக சருமத்தை ஆழமாக சுத்தம் செய்வதுடன், தோலில் இருக்கும் அழுக்குகளை நீக்குகிறது. பப்பாளியுடன் ஸ்க்ரப் செய்வது உங்கள் சருமத்தை உட்புறமாக சுத்தப்படுத்துகிறது. ஸ்க்ரப்பிங் செய்ய, ஒரு ஸ்பூன் அளவு மசித்த பப்பாளியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது, அதில் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் அல்லது அரிசி மாவு சேர்க்கவும். இறுதியில், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலவையை தயார் செய்யவும். கலவையை உங்கள் முகத்தில் 2-3 நிமிடங்கள் மெதுவாக தேய்க்கவும். இறுதியாக, உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி பலனை காணலாம்.

மசாஜ்
பப்பாளி ஃபேஷியலுக்கான மூன்றாவது படி மசாஜ் ஆகும். இது முகத்தின் அனைத்து செல்களையும் செயல்படுத்துகிறது மற்றும் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்க உதவுகிறது. பப்பாளியுடன் உங்கள் சருமத்தை மசாஜ் செய்வது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இதனுடன், பல தோல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறவும் உதவுகிறது.
பப்பாளி மசாஜ் க்ரீம் எப்படி செய்வது: ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் மசித்த பப்பாளியை எடுத்துக் கொள்ளவும். இப்போது, அதில் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இறுதியாக, சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலவையை தயார் செய்யவும். இப்போது, இந்த கலவையால் உங்கள் முகத்தை, மென்மையான கைகளால், 5-10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். இறுதியாக, உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஃபேஸ் பேக்
ஃபேஷியலின் நான்காவது மற்றும் கடைசிப் படியானது ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் ஆகும். இதன் காரணமாக சருமம் குணமாகி, சருமம் இயற்கையான பளபளப்பைப் பெறுகிறது. பப்பாளி ஃபேஸ் பேக்குகள் மூலம், பல சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன், உங்கள் சருமம் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும்.
எப்படி செய்வது: பப்பாளி ஃபேஸ் பேக் செய்ய, ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளியை எடுத்துக் கொள்ளவும். இப்போது, அதனுடன் 1 டீஸ்பூன் சந்தன தூள் மற்றும் 1 தேக்கரண்டி முல்தானி மிட்டி சேர்க்கவும். இறுதியில், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலவையை தயார் செய்யவும். இப்போது, அதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விடவும். ஃபேஸ் பேக்கை உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிய பின், பளபளப்பான சருமத்தை பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications