Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களை ஒரே இரவில் போக்கும் 5 பொருட்கள்..!
அழகு என்பது ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் பொதுவானதே. பெண்கள் எந்த அளவிற்கு அழகில் அக்கறை காட்டுகிறார்களோ அதை விட குறைந்த அளவே ஆண்களும் அக்கறை காட்டுகிறார்கள். எதுவாக இருந்தாலும் அழகு என்பது முகத்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்து கொள்வதே.

பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் சற்று கடினமானது தான். ஆனால், இதனை நம்மால் எளிதாக பருக்கள் இல்லாமலும், கரும்புள்ளிகள் இல்லாமலும் பார்த்து கொள்ளலாம். இதற்கு பெருசா எதையும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருக்க கூடிய வெறும் 5 பொருட்களே போதும். அந்த முக்கியமான 5 பொருட்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொண்டு, பயன் பெறுவோம்.

சரும பாதுகாப்பு
நம் குழந்தையாக இருக்கும் போது நமது சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். நாம் வளர வளர இவற்றின் தன்மை கடினமாகி கொண்டே போகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொஞ்சம் வேறுபடும். ஆனால், முகத்தில் உண்டாக கூடிய பிரச்சினைகள் எல்லாமே ஒன்று தான்.

குறிப்பு #1
சருமத்தை எப்போதுமே பளபளவென மாற்ற வேண்டுமென்றால் இந்த குறிப்பை பயன்படுத்துங்கள். இதற்கு தேவையானவை...
ஆரஞ்சு 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல் 2 ஸ்பூன்

செய்முறை :-
கற்றாழையை அரைத்து கொண்டு அதன் சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் ஆரஞ்சு சாற்றை கலந்து கொண்டு முகத்தில் தடவவும். 15 நிமிடம் சென்று இதனை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் வராமல் அழகாக இருப்பீர்கள்.

குறிப்பு #2
கருமையாக உள்ள உங்களின் முகத்தை வெண்மையாக மாற்ற பால் மற்றும் எலுமிச்சையை பயன்படுத்தி பாருங்கள். அதற்கு 1 ஸ்பூன் பாலில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவி நன்கு மசாஜ் கொடுங்கள். பிறகு முகத்தை 20 நிமிடத்திற்கு பின் கழுவி விடிவும்.

குறிப்பு #3
பருக்கள் மற்றும் முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்க ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு தேவையான பொருட்கள்..
நெல்லி சாறு 2 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்

செய்முறை
நெல்லிக்காயை அரிந்து, அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். இதற்கு பதிலாக நெல்லிக்காய் பொடியையும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்து இதனுடன் தேன் கலந்து கொண்டு, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை நீரில் கழுவவும்.

குறிப்பு #4
ஆண்களின் முகத்தை விரைவிலே அழகாக்க தயிர் ஒன்றே போதும். ஆம், 2 ஸ்பூன் தயிரை எடுத்து கொண்டு அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடத்திற்கு பிறகுமுகத்தை நீரால் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தை எப்போதும் அதிக பொலிவுடன் வைத்து கொள்ளலாம்.

குறிப்பு #5
முகத்தை மென்மையாகவும் பொலிவாகவும் மாற்ற கூடியத் தன்மை இந்த குறிப்பில் உள்ளது. இதனை தயாரிக்க தேவையானவை...
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
யோகர்ட் 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு 1 ஸ்பூன்

செய்முறை
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த குறிப்பு உங்களுக்கு நல்ல பலனை தரவல்லது.



Click it and Unblock the Notifications











