Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
இப்படி இருக்கிற தேவையில்லாத மச்சத்தை நீக்கணுமா?... அதுக்கு 2 பல் பூண்டு மட்டும் போதும்...
சிலருக்கு கை, கால் முகங்களில் தேவையற்ற இடங்களில் மச்சங்கள் இருக்கும். அதை பூண்டை வைத்து எப்படி போக்குவது என்று இங்கே கொடுத்துள்ளோம்.
மச்சங்கள் என்பது, தோலில் காணப்படும் பழுப்பு அல்லது கருப்பு நிற தழும்பு போன்ற வடிவங்கள். ஒருவரின் பிறப்பு நேரத்தில் அல்லது வளர்ந்த பின்னர் தோன்றும் இவை இயற்கையான தழும்புகள்.

இவைகள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும் பெரிய வடிவில் அல்லது பெரிய அளவில் தோன்றினால் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

மச்சங்கள்
முகம், கைகள், முதலிய எளிதில் புலப்படும் பகுதிகளில் இந்த மச்சங்கள் தோன்றும்போது, நமக்கு மிகவும் சங்கடமானதாக இருக்கலாம். அறுவை சிகிச்சைகள் மட்டுமல்லாமல், இயற்கை சிகிச்சைகள் மூலம் கூட இந்த மச்சங்களை எளிதாக நீக்கலாம்.
அத்தகைய ஒரு தீர்வை பூண்டு உங்களுக்கு வழங்குகிறது. ஆமாம், நீங்கள் அதைப் படித்திருப்பீர்கள். சருமத்தில் மெலனினின் அதிகப்படியான உற்பத்தியை குறைப்பதில் பூண்டு உதவுகிறது, இதனால் இந்த கரும்புள்ளிகள் மற்றும் நிறமிகளைக் குறைப்பதில் உதவுகிறது. மச்சத்தைப் போக்க பூண்டை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம் வாருங்கள்,

பூண்டு
இந்த சிகிச்சையே, மச்சங்களை விரட்ட மிகவும் அடிப்படை வழி. ஒரு பூண்டுத் துண்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மச்சத்தின் மீது இந்தத் துண்டுகளை வைத்து , அதைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு கட்டு(bandage) அல்லது பசை நாடாவைப் ( adhesive tape) பயன்படுத்தவும். 4-5 மணி நேரம் அதை அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் கட்டுகளை அகற்றி, அந்தப்பகுதியைக் கழுவவும். இதை குறைந்தது ஒரு நாளைக்கு 3 முறை நீங்கள் செய்யலாம்.

பூண்டு மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி
3-4 பூண்டுத் துண்டுகளை எடுத்து, தோலை உரிக்கவும். அவைகளை நசுக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். மச்சத்தின் மீது முதலில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லியைப் பூசுங்கள், இதனால் பூண்டு மூலம் ஏற்படும் எரிச்சல் தவிர்க்கப்படும். இப்போது க்யூ-டிப்பைப் பயன்படுத்தி மச்சங்கள் மீது பூண்டு சாற்றைப் பூசவும். இரவில் பூசி அடுத்த நாள் காலையில் அதை சுத்தம் செய்யலாம். வித்தியாசத்தைப் பார்க்கும் வரை ஒவ்வொரு நாளும் இதை மீண்டும் தொடரவும்.

பூண்டு மற்றும் ஆமணக்கு எண்ணெய் :
இந்த வைத்தியத்திற்கு 2-3 பூண்டு விழுதுகள் மற்றும் ஒரு சில சொட்டு ஆமணக்கு எண்ணெய் வேண்டும். உரித்த பூண்டு விழுதுகளை அரைத்து/நசுக்கி ஒரு பேஸ்ட்டாக்கவும். இதில் ஆமணக்கு எண்ணெயை ஒரு சில துளிகள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை உங்கள் மச்சத்தின் மீது தடவி இரவு முழுதும் விட்டுவிடுங்கள். அடுத்த நாள் காலையில் அதை நன்கு கழுவி துடைத்திடுங்கள். விரைவான முடிவுகளைப் பார்க்க ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த தீர்வைப் பயன்படுத்தவும். இரவில் முழுவதும் பூண்டு பேஸ்டைப் பாதுகாக்க bandage- ஐ பயன்படுத்தலாம்.

பூண்டு மற்றும் வினிகர்:
இந்த தீர்வுக்கு, நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது சாதாரண வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். உரித்த பூண்டு விழுதுகளை அரைத்து/நசுக்கி ஒரு பேஸ்ட்டாக்கவும். பேஸ்ட் மென்மையாகும் வரை போதுமான வினிகரைச் சேர்க்கவும். இந்தக் கலவையை உங்கள் மச்சத்தின் மீது பயன்படுத்துங்கள். சுமார் 30 நிமிடங்கள் அதை விட்டு விடுங்கள். 30 நிமிடங்களுக்கு பிறகு சாதாரண தண்ணீரைக் கொண்டு அதை சுத்தம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு முறை செய்யவும்.

பூண்டு மற்றும் வெங்காயம்
இரண்டையும் நன்கு நசுக்கி சாரைப் பிரித்தெடுங்கள். ஒரு பருத்திப் பந்து / திண்டைப் (cotton pad) பயன்படுத்தி இதை உங்கள் மச்சத்தின் மீது தடவி 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பிறகு நல்ல நீரைக்கொண்டு அதை சுத்தம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்தத் தீர்வை மீண்டும் செய்யவும். வெங்காயத்தை , பூண்டுடன் பயன்படுத்தும் போது, கருப்பு / பழுப்பு புள்ளிகளை மறையச் செய்ய உதவுகிறது.

சில குறிப்புகள்
1. பூண்டு பயன்படுத்துவதால், நீங்கள் எரியும் உணர்வை அனுபவிக்கலாம். அதைக் குறைக்க சிறிது தண்ணீரை பூண்டு பேஸ்டுடன் கலக்கி பின்னர் விண்ணப்பிக்கலாம்.
2. பூண்டு பயன்படுத்துவதால் உங்கள் முகத்தில் தோல் உலர்ந்தால், சில ஈரப்பதமூட்டும் கிரீம்களை விண்ணப்பிக்கலாம்.
3. பூண்டு பயன்பாட்டிற்குப் பிறகு உங்கள் மச்சத்தை கீற வேண்டாம்.
4. தோலில் தோன்றும் கரும்புள்ளிகளை தவிர்க்க அதிக அளவு சூரிய வெளிச்சத்தில் நீங்கள் இல்லாதிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications