Latest Updates
-
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
உங்கள் சருமம் சிவப்பு நிறத்தை பெற நெல்லிகாய் நீர் எப்படி உதவுகிறது?
நெல்லிக்காயில் செய்யப்படும் நீர் எவ்வாறு கூந்தல் வளர்ச்சிகும், சரும பராமரிப்பிற்கும் உதவுகிறது என்பதை இக்கட்டுரை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் தினசரி வாழ்வில் அழகை மேம்படுத்த நெல்லிக்காய் நீரினை இவ்வளவு நாட்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்தால்...இன்று 'போல்ட்ஸ்கை' ஆர்டிக்கலின் மூலமாக படித்து, இனிமேல் உபயோகித்து பயன் பெறுவீர் என்பதில் எத்தகைய சந்தேகமும் வேண்டாம்.
நெல்லிக்காய் நீரின் பயன்பாடு பல இருக்க, அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒரு இயற்கை மூலப்பொருளாகவும் அமைந்து, உங்கள் சருமம் மற்றும் கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வினையும் இது தருகிறது.

நெல்லிக்காய் நீர் தயாரிக்கும் முறை :
மேலும், இந்த நெல்லிக்காய் நீரினை உங்கள் வீட்டிலிருந்தபடியே தயாரிப்பது மிகவும் எளிதாகவும் இருக்கிறது. நீங்கள் 3 லிருந்து 4 நெல்லிக்காய் பழத்தை நறுக்கி வைத்துகொள்ளுங்கள். அதனை ஒரு கப் தண்ணீரை கொண்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனை ஜூஸரை கொண்டு பிரித்து விடுங்கள். கிடைக்கும் நெல்லிக்காய் தண்ணீரை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

நிறம் அதிகரிக்க :
நிறைய பெண்கள், இந்த நெல்லிக்காய் நீரினை தங்களுடைய சருமத்தின் நிறத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.
உங்கள் சருமத்தை புதுப்பிக்கும் பண்பு கொண்ட இந்த நெல்லிக்காய் நீர், உங்கள் சருமத்தை பிரகாசமானதாக வைத்துகொள்ள உதவுவதுடன் நிறத்தையும் மேம்படுத்தி சரியான முறையில் வைக்கிறது.
வாரத்திற்கு 3 அல்லது 4 முறை இதனை கொண்டு முகத்தினை கழுவ, சில வாரங்களிலே உங்கள் சருமத்தில் வித்தியாசத்தை கண்டிப்பாக காண்பீர்கள்.

முதுமை பருவத்திற்கான அறிகுறிகளை தாமதப்படுத்த :
இது, நெல்லிக்காய் நீரினை பயன்படுத்துவதால் சருமத்தினை பாதுகாக்கும் மற்றுமோர் சிறந்த வழியாகும். இந்த தீர்வில், ஊட்டசத்துகளால் உங்களுடைய சருமத்தின் இழுவையானது (ELASTICITY) மேம்படுவதுடன், கோலஜன் உருவாக்கத்தையும் அதிகரிக்க இது உதவுகிறது.
அத்துடன் இது முதிர்சியடைதல் பண்பினை தாமதிக்க செய்து சுருக்கங்கள், கோடுகள் சருமத்தில் விழுதல் ஆகிய பல பிரச்சனைகளிலிருந்து உங்களை காப்பாற்றவும் உதவுகிறது.

இயற்கை கிருமி நாசினி
நெல்லிக்காய் நீரினை, காட்டன் பஞ்சில் நனைத்துகொண்டு, சருமத்தில் எரிச்சல் ஏற்படும் இடத்தில் நீங்கள் தடவி, எரிச்சலில் இருந்து விடுதலை அடையலாம்.

வெண்புள்ளிகளிலிருந்து விடுதலை அளிக்க :
நெல்லிக்காய் நீரின் மற்றுமொரு பயன்பாடாய், சருமத்தில் ஏற்படும் வெண்புள்ளிகளை நீக்குவது இருக்கிறது. இதனை உங்கள் சருமத்தில் பயன்படுத்த, அது உங்கள் சருமத்தின் துளைகளில் சேரும் அழுக்கு மற்றும் நச்சினை நீக்குகிறது. இதனை மற்றுமோர் இயற்கை மூலப்பொருளுடன் கலந்து, சருமத்தில் வாரம் தோறும் பயன்படுத்தி வரலாம்.

தோல் மறுமலர்ச்சிக்கு உதவ
சருமத்தை சரி செய்வதற்காகவும், மறுமலர்ச்சி முறைக்காகவும் இந்த நெல்லிக்காய் நீர் உதவுகிறது. உங்கள் சருமத்தில் படும் UV கதிர்களாலும், காற்றினால் ஏற்படும் மாசினாலும் என பல காரணிகளால், இந்த தோல் மறுமலர்ச்சி முறையானது பாதிக்கப்படுகிறது. அத்துடன், உங்கள் உடல் நலத்தையும் அது பாதிப்பதோடு... சருமத்தின் அழகினையும் சேர்த்து பாதிக்கிறது.

இறந்த சரும செல்களை நீக்க
இந்த பாரம்பரிய தீர்வை அளிக்கும் நெல்லிக்காயிலுள்ள பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு, உங்கள் சருமத்தில் சேரும் இறந்த செல்களிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
இந்த நெல்லிக்காய் நீரினை, மற்ற இயற்கை மூலப்பொருள்களுடன் கலந்து, அந்த மாஸ்க் போல் சருமத்தில் பயன்படுத்தலாம் அல்லது சருமத்தை அதனை கொண்டு கழுவலாம். இவ்வாறு வாரம்தோறும் நீங்கள் செய்து வர, நல்லதோர் முன்னேற்றத்தை உங்கள் சருமத்தில் காணலாம்.

உங்கள் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பினை விரட்ட:
விரும்பத்தகாத பிரச்சனைகளான பொடுகு தொல்லை, உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு ஆகியவற்றினை போக்க இது பயன்படுகிறது. ஒரு காட்டன் பஞ்சினை, நெல்லிக்காய் நீரில் நனைத்துகொள்ள வேண்டும்.
அதனை, உங்கள் உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இந்த கரைசலை உங்கள் உச்சந்தலையில் அரை மணி நேரம் வைத்திருந்து, அதன் பின்னர் தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்

முடி வளர்ச்சிக்கு உதவ:
இது தான் பெரும்பாலான மக்கள், நெல்லிக்காய் நீரினை தங்களுடைய அழகினை மேம்படுத்த தினமும் உபயோகிக்க காரணமாக இருக்கிறது. முடி உதிர்தலையும் தடுக்கிறது. நெல்லிக்காய் நீரினை, உங்கள் கூந்தலை பராமரிக்க வாரம்தோறும் பயன்படுத்தி, முடி உதிர்தல் பிரச்சனைக்கு குட்பை சொல்லி விரட்டி அடியுங்கள்.

கூந்தலின் அளவினை அதிகரிக்க :
பெரும்பாலான பெண்கள் எதிர் நோக்கும் ஒரு பிரச்சனையாக இந்த மெல்லிய கூந்தல் பிரச்சனை இருக்கிறது. இந்த மாதிரி கூந்தலினை கொண்டவர்கள், கூந்தல் சேத பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அது முடி உதிர்தலுக்கும் வழிவகை செய்துவிடுகிறது.
இந்த நெல்லிக்காய் நீரினை உங்கள் மெலிந்த முடியில் தடவ...இதில் இருக்கும் ஊட்டசத்துக்கள் உங்கள் முடியில் ஏற்படும் சிக்கலை நீக்கி, அளவினையும் அதிகரிக்க உதவுகிறது. அதனால், இந்த அம்லா நீரினை, கூந்தலில் தடவி, உங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி, எண்ணற்ற பலனை தான் பெற்று மகிழுங்களேன்.



Click it and Unblock the Notifications











