Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சருமத்தின் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் மஞ்சள் பேக் ட்ரை பண்ணியிருக்கீங்களா?
பெண்களுக்கு முகத்தை பளிச்சென்று சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென விருப்பம்தான். ஆனால் முகப்பரு, எண்ணெய் வடிதல், கரும்புள்ளி ஆகியவை நம்மை கேட்டுக் கொண்டா வருகிறது.
சிலருக்கு சருமத்தின் அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இயற்கையாகவே அதிகமாய் சுரக்கும். இதனால் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டு, முகப்பருவை வரவேற்கத் தொடங்கிவிடும்.
அதுமட்டுமில்லாமல் எளிதில் அழுக்கு படிந்து, சருமம் கடினத்தன்மையாய் மாறிவிடும். இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

இந்த குறிப்பில் சொல்வது படி, நீங்கள் மஞ்சள் பேக் வாரம் ஒருமுறை உபயோகித்தால், எண்ணெய் வழியாது, முகப்பருக்களுக்கு தடா போட்டுவிடும். சுருக்கங்கள் நீங்கி விடும். கண்களில் உண்டாகும் கருவளையம் மறைந்துவிடும்.
முகம் பளபளப்பாக மின்னும். முகம் தேஜசாக மிளிர, நம்மால் வாரம் ஒரு நாள், வெறும் 15 நிமிடங்கள் செலவழிக்க முடியாதா என்ன..
மஞ்சள் பேக் செய்ய தேவையானவை :
எப்போது கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டாம். அதில் ரசாயனம் இருப்பதால் அவற்றை உபயோகித்தால் சருமத்திற்கு நல்லதல்ல.
மஞ்சள் கிழங்கு வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்லுங்கள். இது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. அதேபோல் தேனையும் ஒரிஜினலா என பரிசோதித்து உபயோகபபடுத்துங்கள்.
மஞ்சள் பொடி - 3 டீ ஸ்பூன்
யோகார்ட் - ட் டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீ ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
முதலில் யோகார்ட்டை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலக்கி பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின்னர் தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, அதில் மஞ்சள் 2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது மஞ்சள் மாஸ்க் தயார். இதனை கண்களை தவிர்த்து முகம் முழுவதும் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
வாரம் ஒரு முறை இதுபோல் செய்யவும். முகம் மிளிரும். முகப்பரு, மாசு, கருமை ஆகியவை நீங்கி முகம் பொலிவாக இருக்கும். நீங்களும் வீட்டில் முயன்று பாருங்கள்.



Click it and Unblock the Notifications















