Latest Updates
-
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலை சமாளிக்க இந்த 5 செடிகள் போதும்… வீடே குளிர்ச்சியாகவும் செல்வமும் தானாக பெருகும்! -
நீட் மறுதேர்வு எப்போது? சிபிஐ அதிரடி கைதுக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இதெல்லாம் செய்யாதீங்க.. இல்ல சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தியான இன்று எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும்?
பீல் ஆஃப் மாஸ்க் வீட்டிலேயே செய்ய ட்ரை பண்ணியிருக்கீங்களா? இப்ப ட்ரை பண்ணுங்க ஈஸியா
சருமம் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு கடினமாக, சிலருக்கு மிருதுவாக. ஆனால் சிலருடைய சருமத்தை உற்று கவனித்தால், சருமத்தின் துவாரங்கள் நன்றாக தெரியும்படி பெரிதாகவே இருக்கும்.
இந்த மாதிரி பெரிய துவாரங்கள் உள்ள சருமம் நிறைய பிரச்சனைகளை தரும். அழுக்கு, இறந்த செல்கள், பேக்டீரியா ஆகியவை துவாரத்தில் அடைபட்டு வெளிவராது.

இதனால் முகப்பரு, கரும்புள்ளி, கருமை ஆகியவை ஏற்படும். முதுமையை எளிதில் அளித்துவிடும். இவற்றினை பீல் ஆஃப் மாஸ்க் கொண்டு அகற்றலாம்.
ஆனால் அதனை ஏன் காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டும். உங்களுக்கே தெரியும் அதிலிருக்கும் ரசாயனம் சருமத்திற்கு கேடுவிளைவிக்கும் என்று... பின் என்ன செய்யலாம்? இப்படி நம் வீட்டிலேயே இந்த மாஸ்க்கை தயாரிக்கலாம்.
தேவையானவை :
முட்டையின் வெள்ளைக் கரு - 1
எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
பிரஷ் -1
மெல்லிய டிஷ்யூ தாள் - தேவையானவை
முட்டையின் வெள்ளைக்கருவை தனியே எடுத்து, அதில் தேன், எலுமிச்சை சாற்றினை சேருங்கள். பின் நன்றாக கலக்கி, பிரஷ்ஷைக் கொண்டு, முகத்தில் தடவவேண்டும்.
கண்கள், வாய் பகுதியை தவிர்த்து மீதி இடங்களில் லேயராக தடவ வேண்டும். பிறகு அதன் மேல் மெல்லிய டிஷ்யூ தாளை படரச் செய்யுங்கள்.
20 நிமிடங்களுக்கு பிறகு மெதுவாய் டிஷ்யூ பேப்பரை எடுங்கள். அதனோடு, அழுக்குகளும் சேர்ந்து வந்துவிடும். சருமத்தின் துவாரங்கள் சுருங்கி, சின்னதாகிவிடும்.
இது போல் வாரம் இரு முறை செய்தால், அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவை நீங்கி, இளமையோடு சருமம் இருக்கும்.



Click it and Unblock the Notifications


