Just In
- 7 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 50 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
15 நாட்களில் வெள்ளையான சருமம் வேண்டுமா? இதோ சில வழிகள்!
இன்றைய காலத்தில் பலருக்கும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அதில் உடல் ஆரோக்கியமாகட்டும், அழகு பராமரிப்பாகவும், எதற்கும் இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் தான் காரணம்.
கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இன்றைய தலைமுறையினருக்கு அழகின் மீது அதிக அக்கறை உள்ளது. குறிப்பாக வெள்ளையாக அதிக ஆசை உள்ளது.
எனவே வெள்ளையாகவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை நீக்கவும் ஒருசில இயற்கை வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பயன் பெறுங்கள்.
எலுமிச்சை சாறு + வேர்க்கடலை எண்ணெய்
இம்முறை கரும்புள்ளிகள் மற்றும் பிம்பிளை நீக்க சிறந்த வழி. எலுமிச்சை சாற்றில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பிம்பிள் போன்றவை மறைந்துவிடும்.
தேன் + பட்டை பொடி
தினமும் பட்டை பொடியை தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி இரவில் படுக்கும் முன் தடவி மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 14 நாட்கள் செய்து வந்தால், உங்கள் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
புதினா + வெள்ளரிக்காய் சாறு
வெள்ளரிக்காய் சாறு மற்றும் புதினா சாற்றினை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தினமும் செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.
லெட்யூஸ் + கேரட் ஜூஸ்
லெட்யூஸ் மற்றும் கேரட்டை சாறு எடுத்து ஒன்றாக கலந்து, கை, கால், முகத்தில் தினமும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, கருமை நீங்கி சருமம் நன்கு பொலிவடையும்.
சிட்ரஸ் பழச்சாறு + தண்ணீர்
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, காட்டன் பயன்படுத்தி கை, கால், முகத்தை துடைத்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஆனால் இந்த செயல்முறைக்கு பின் மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.