Latest Updates
-
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
சருமத்தில் சேரும் அழுக்குகளை நீக்க உதவும் ஃபேஷியல் ஸ்கரப்கள்!!!
கோடைக்காலத்தில் வெயில் அதிக அளவில் இருப்பதால், வியர்வை அதிகம் வெளியேறி, அதனால் சருமத்துளைகள் திறந்து, அதனுள் அழுக்குகள் புகுந்து, முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும்.
அதுமட்டுமின்றி, சருமத்துளைகளில் அழுக்குகள் அதிகம் இருந்தால், அவை சருமத்தை கருமையாக வெளிக்காட்டும். ஆகவே நீங்கள் வெள்ளையாக காட்சியளிக்க தினமும் ஃபேஷியல் செய்ய வேண்டும்.
அதிலும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அன்றாடம் ஃபேஷியல் செய்து வந்தால், முகம் பொலிவோடு பிரகாசமாக மின்னும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்றும், அவற்றைக் கொண்டு எப்படி ஃபேஷியல் செய்வதென்றும் பார்ப்போம்.

காபி தூள்
காபி தூளில் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வர முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

ஓட்ஸ்
ஓட்ஸை பொடி செய்து, அதில் பால் மற்றும் லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு, முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமம் பிரகாசமாக இருக்கும்.

பப்பாளி
பப்பாளியை மசித்து, அதில் சிறிது தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, விரலால் மென்மையாக முகத்தை ஸ்கரப் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி
தக்காளியை மசித்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பொலிவோடு இருக்கும்.

க்ரீன் டீ
சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை குளிர வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு, முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், முகம் பளிச்சென்று காணப்படும்.

பாதாம்
பாதாமை ஒன்றிடண்டாக அரைத்து அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் முகம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட்டில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, அதனை பிம்பிள் அல்லது முகப்பரு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், பருக்கள் அனைத்தும் மறையும்.

தயிர்
தயிரில் சர்க்கரை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், அதில் உள்ள வைட்டமின்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும். மேலும் தயிர் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications