Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 10 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கரும்புள்ளியை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!
அழகைக் கெடுப்பதில் எப்படி முகப்பருக்கள் முதன்மையாக உள்ளதோ, அதற்கு அடுத்தப்படியாக இருப்பது கரும்புள்ளிகள் தான். இத்தகைய கரும்புள்ளிகளை நீக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்கள் கடைகளில் இருந்தாலும், அவை அனைவருக்குமே சிறந்ததாக செயல்படும் என்று சொல்ல முடியாது.
ஏனெனில் அந்த கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தினால், சில சமயங்களில் சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே அத்தகைய பிரச்சனைகள் எல்லாம் வராமல் இருக்க வேண்டுமென்றால், அதற்கு இயற்கை முறை தான் சிறந்தது. இப்போது அந்த கரும்புள்ளிகளை இயற்கை வழியில் நீக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.
ஓட்ஸ்
கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்து என்னவென்றால் ஓட்ஸை பவுடர் செய்து, ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.
தக்காளி
தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம்.
கொத்தமல்லி
கொத்தமல்லி மற்றும் மஞ்சள் தூள் ஒரு சிறந்த மருந்து. இதனை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காய வைத்து கழுவ வேண்டும்.
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிது நேரம் காய வைத்து, பிறகு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.