Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
சிவப்பா மாற ஆசையா? அப்ப சிவப்பு நிற பழங்களைக் கொண்டு மாஸ்க் போடுங்க...
பொதுவாக சிவப்பு நிறம் அபாயத்தைத் தான் குறிக்கும். ஆனால் அந்த நிறம் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்க வல்லது. ஆம், எப்படியெனில், சிவப்பு நிற பழங்களில் எண்ணற்ற உடல் நல நன்மைகளைத் தவிர, அழகு நன்மைகளும் அடங்கியுள்ளன. அதிலும் சிவப்பு நிற பழங்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமம் அழகாக மாறுவதோடு, ஆரோக்கியமாகவும் மாறும்.
ஏனெனில் இந்த பழங்களில் ஒருசில கனிமச்சத்துக்கள் இருப்பதால், இது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை மட்டுமின்றி, சருமத்தை வெள்ளையாகவும் மாற்ற உதவுகிறது. எனவே சருமத்தில் பிரச்சனைகள் இருந்தால், அப்போது கண்ட கண்ட க்ரீம்களைக் கொண்டு சருமத்தைப் பாதுகாப்பதை விட, சிவப்பு நிற பழங்களைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
அதிலும் வாரத்திற்கு ஒருமுறை சிவப்பு நிற பழங்களைக் கொண்டு, சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், விரைவிலேயே அதற்கான பலனை பெறலாம். சரி, இப்போது எந்தெந்த சிவப்பு நிற பழங்களைக் கொண்டு, எப்படியெல்லாம் சருமத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

மாதுளை
மாதுளையைக் கொண்டும் சருமத்தைப் பராமரிக்கலாம். அதற்கு ஒரு கப் மாதுளை மணிகளை 3/4 கப் க்ரீம் சேர்த்து, நன்கு அரைத்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி
சருமத்தை சரியாக பாதுகாப்பதில் ஸ்ட்ராபெர்ரி முக்கிய பங்கினை வகிக்கிறது. மேலும் ஸ்ட்ராபெர்ரி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் வல்லமைக் கொண்டது. ஆகவே பொலிவிழந்த சருமம் உள்ளவர்கள், ஸ்ட்ராபெர்ரியை பாலுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தட்வி, ஊற வைத்து கழுவ வேண்டும்.

செர்ரி
செர்ரிப் பழம் சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தைப் போக்குவதில் சிறந்தது. அதற்கு செர்ரிப் பழத்தை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தக்காளி
தக்காளியும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கும் திறமைக் கொண்டது. ஆகவே தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி, சிறிது நேரம்த மசாஜ் செய்து நன்கு உலர விட்டு, பால் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து, இறுதியில் குளிர்ந்த நீர் கொண்டு அலச வேண்டும்.

ப்ளம்ஸ்
முகப்பரு அதிகம் உள்ளவர்கள், 2 ப்ளம்ஸ் பழத்தை எடுத்துக் கொண்டு, அதனை பால் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பருக்கள் நீங்குவதோடு, அதனால் உண்டாகும் தழும்புகளும் நீங்கி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும்.

தர்பூசணி
நீர்ச்சத்து அதிகம் கொண்ட தர்பூசணியின் ஒரு துண்டை எடுத்து, சிறிது நேரம் மசாஜ் செய்து, உலர வைத்து, மீண்டும் மற்றொரு துண்டால் மசாஜ் செய்து, உலர விட்டு, மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

ஆப்பிள்
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால், எப்படி மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லையோ, அதேப் போல் ஆப்பிள் கொண்டு, முகத்திற்கு மாஸ்க் போட்டாலும், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை க்யூட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஆப்பிளை அரைத்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஈரமான சருமத்தில் தடவி, நன்கு 30 நிமிடம் காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

குருதிநெல்லி (Cranberries)
இந்த சிவப்பு நிற பழமும் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் தன்மை கொண்டது. அதிலும் முகத்தில் வெள்ளைத் திட்டுக்கள் இருந்தால், அதனைப் போக்குவதற்கு, இந்த பழத்தின் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், எளிதில் போக்கலாம்.

ராஸ்ப்பெர்ரி
கரும்புள்ளி பிரச்சனை உள்ளவர்கள், ராஸ்ப்பெர்ரியை முகத்தில் தேய்ப்பதோடு, கரும்புள்ளி உள்ள இடமான மூக்கு பகுதியில் நன்கு 15 நிமிடம் தேய்த்து, பின் பாலில் நனைத்த காட்டன் கொண்டு, துடைத்து எடுத்தால், கரும்புள்ளிகள் எளிதில் போய்விடும்.

சிவப்பு திராட்சை
சிவப்பு நிற திராட்சையின் சாற்றினைக் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் காணப்படும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும்.



Click it and Unblock the Notifications