Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
சருமப் பிரச்சனைகளை தடுக்கும் வேப்பிலை ஃபேஸ் பேக்...

மேலும் இந்த வேப்பிலை நிறைய அழகுப் பொருட்களான க்ரீம், லோசன் மற்றும் ஷாம்புக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிலும் இதல் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள் சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் பழுப்பு நிறத்தோல் போன்றவற்றை சரிசெய்யும். இப்போது இந்த வேப்பிலையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளலாமே!!!
வேப்பிலை: கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் அதன் இலையை அரைத்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். இதனால் முகத்தில் இருக்கும் சிவப்புநிறம், அரிப்பு மற்றும் தழும்புகள் போன்றவை குணமாகும்.
வேப்பிலை, எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர்: முகப்பரு இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஃபேஸ் பேக். அதற்கு வேப்பிலை பவுடருடன், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், இரண்டு நாட்களில் பருக்களை குறைக்க முடியும்.
வேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு: வேப்பிலையை நன்கு அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த ஒரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கினால், இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதை தடுக்கும். வேண்டுமெனில் இதனை பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.
வேப்பிலை, கடலை மாவு மற்றும் தயிர்: வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்ததாக இருக்கும். இதற்கு ஒரு பௌலில் ஒரு டீஸ்ழுன் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது அரைத்த வேப்பிலையை போட்டு கலந்து, தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதோடு, சருமம் மென்மையாகவும் மாறும்.
வேப்பிலை மற்றும் பால்: சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேப்பிலை பொடியுடன் பாலை சேர்த்து பேஸ்ட் செய்து கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வேப்பிலை, துளசி மற்றும் தேன்: ஒரு பௌலில் வேப்பிலைப் பொடி, துளசி பொடி மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, நன்கு ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் பிம்பிள், பருக்கள் போன்றவற்றை தடுத்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.
இவையே வேப்பிலையை வைத்து சருமத்திற்கு செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள். வேறு ஏதாவது வேப்பிலையை வைத்து செய்யக்கூடிய ஃபேஸ் பேக்குகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications