Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கா? இத ஞாபகம் வெச்சுக்கோங்க...
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருவானது தற்போது பெரும்பாலானோரின் முகங்களில் அதிகம் இருப்பதோடு, முகத்தின் அழகையே கெடுத்துவிடுகிறது. குறிப்பாக இதில் இளம் வயது பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பலர் அதனை கைகளாலேயே பிய்த்து எரிந்துவிடுகின்றனர். இவை மட்டும் முகப்பருக்களைப் போக்குவதற்கு வழியில்லை. இத்தகைய முகப்பருக்களை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. உதாரணமாக, எலுமிச்சை, சந்தனப் பொடி, தேன், கற்றாழை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு போக்கலாம்.
இருப்பினும், அவற்றை முகத்தில் தடவினால் மட்டும் போதாது. ஒருசிலவற்றையும் பின்பற்ற வேண்டும். அதில் முதன்மையானது சுத்தம். பருக்கள் இருப்பவர்கள் அதனைப் போக்குவதற்கு முதலில் சுத்தமாக இருப்பதோடு, ஒருசிலவற்றையும் மனதில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றினால், பருக்களை எளிதில் போக்கலாம்.

பருக்களை கிள்ளக்கூடாது
பருக்களை கிள்ளினால் சீக்கிரம் போய்விடும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் பருக்களை கிள்ளினால், அவை அந்த நேரத்தில் போய்விடும். ஆனால் அவை கரும்புள்ளிகளாக மாறிவிடுவதோடு, கிள்ளும் போது அதிலிருக்கும் நீர்மம் சருமத்தில் பரவி பருக்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

கழுவுதல்
பருக்கள் அதிகம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை கழுவினால் தான், முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய்கள் போன்றவை வெளியேறி, பருக்கள் குறையும்.

தொடக்கூடாது
பருக்கள் முகத்தில் இருந்தால், முகத்தை அடிக்கடி தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால், கைகளில் உள்ள அழுக்களினாலேயே அவை பெரிதாகிவிடுவதோடு, உடைந்து பரவ ஆரம்பிக்கும்.

மேக்-கப் பிரஷ்களை சுத்தப்படுத்தவும்
எப்போது மேக்-கப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாசுடன் இருக்கும் பிரஷ்களை முகத்தில் பயன்படுத்தினால், அதில் உள்ள பாக்டீரியாக்கள், பருக்களை உடைய வைக்கும். எனவே எப்போதும் முகத்தில் பயன்படுத்தும் மேக்-கப் பிரஷ்களை நீரில் அலசி, காய வைத்து, பின்னரே முகத்தில் பயன்படுத்த வேண்டும்.

மேக்-கப்பை நீக்கவும்
எப்போதும் தூங்கும் முன், முகத்தில் உள்ள மேக்-கப்பை நீக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்தால், பருக்கள் முகத்தில் ஏற்படுவது தடுக்கப்படும்.

எண்ணெயில்லா ஃபௌண்டேஷன்
பருக்கள் இருந்தால், முகத்திற்கு எண்ணெயில்லா ஃபௌண்டேஷனை பயன்படுத்த வேண்டும். இதனால் பருக்கள் மறைக்கப்படுவதோடு, அவை வருவதும் தடுக்கப்படும்.

தண்ணீர் பருகவும்
நிறைய தண்ணீர் பருகினால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறும். இதனால் சருமம் பாதிப்படைவதையும், முகப்பருக்கள் வருவதையும் தடுக்கலாம்.

முடியை கட்டவும்
எப்போதும் முடியை முகத்தில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முடியில் உள்ள எண்ணெயால் பருக்கள் அதிகமாகும்.

நன்கு தூங்கவும்
தூக்கமின்மையும் சருமத்தை பாதிக்கும். எனவே எப்போதும் அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில், நன்கு தூங்க வேண்டும். இதனால் முகம் பொலிவோடு பருக்களின்றி இருக்கும்.

ஃபேஸ் பேக்
பருக்களை போக்குவதற்கு பல இயற்கை ஃபேஸ் பேக்குகள் உள்ளன. ஆகவே பருக்களை போக்க வேண்டுமெனில், மேற்கூரிய செயல்களை பின்பற்றி, அத்துடன் ஃபேஸ் பேக்குகளை போட்டால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் வாரத்திற்கு இரண்டு முறை போட வேண்டும்.



Click it and Unblock the Notifications