Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கா? இத ஞாபகம் வெச்சுக்கோங்க...
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இத்தகைய முகப்பருவானது தற்போது பெரும்பாலானோரின் முகங்களில் அதிகம் இருப்பதோடு, முகத்தின் அழகையே கெடுத்துவிடுகிறது. குறிப்பாக இதில் இளம் வயது பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பலர் அதனை கைகளாலேயே பிய்த்து எரிந்துவிடுகின்றனர். இவை மட்டும் முகப்பருக்களைப் போக்குவதற்கு வழியில்லை. இத்தகைய முகப்பருக்களை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. உதாரணமாக, எலுமிச்சை, சந்தனப் பொடி, தேன், கற்றாழை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு போக்கலாம்.
இருப்பினும், அவற்றை முகத்தில் தடவினால் மட்டும் போதாது. ஒருசிலவற்றையும் பின்பற்ற வேண்டும். அதில் முதன்மையானது சுத்தம். பருக்கள் இருப்பவர்கள் அதனைப் போக்குவதற்கு முதலில் சுத்தமாக இருப்பதோடு, ஒருசிலவற்றையும் மனதில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றினால், பருக்களை எளிதில் போக்கலாம்.

பருக்களை கிள்ளக்கூடாது
பருக்களை கிள்ளினால் சீக்கிரம் போய்விடும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் பருக்களை கிள்ளினால், அவை அந்த நேரத்தில் போய்விடும். ஆனால் அவை கரும்புள்ளிகளாக மாறிவிடுவதோடு, கிள்ளும் போது அதிலிருக்கும் நீர்மம் சருமத்தில் பரவி பருக்கள் அதிகரிக்கத்தான் செய்யும்.

கழுவுதல்
பருக்கள் அதிகம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை கழுவினால் தான், முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய்கள் போன்றவை வெளியேறி, பருக்கள் குறையும்.

தொடக்கூடாது
பருக்கள் முகத்தில் இருந்தால், முகத்தை அடிக்கடி தொடக்கூடாது. அவ்வாறு தொட்டால், கைகளில் உள்ள அழுக்களினாலேயே அவை பெரிதாகிவிடுவதோடு, உடைந்து பரவ ஆரம்பிக்கும்.

மேக்-கப் பிரஷ்களை சுத்தப்படுத்தவும்
எப்போது மேக்-கப் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மாசுடன் இருக்கும் பிரஷ்களை முகத்தில் பயன்படுத்தினால், அதில் உள்ள பாக்டீரியாக்கள், பருக்களை உடைய வைக்கும். எனவே எப்போதும் முகத்தில் பயன்படுத்தும் மேக்-கப் பிரஷ்களை நீரில் அலசி, காய வைத்து, பின்னரே முகத்தில் பயன்படுத்த வேண்டும்.

மேக்-கப்பை நீக்கவும்
எப்போதும் தூங்கும் முன், முகத்தில் உள்ள மேக்-கப்பை நீக்கிவிட வேண்டும். இவ்வாறு செய்தால், பருக்கள் முகத்தில் ஏற்படுவது தடுக்கப்படும்.

எண்ணெயில்லா ஃபௌண்டேஷன்
பருக்கள் இருந்தால், முகத்திற்கு எண்ணெயில்லா ஃபௌண்டேஷனை பயன்படுத்த வேண்டும். இதனால் பருக்கள் மறைக்கப்படுவதோடு, அவை வருவதும் தடுக்கப்படும்.

தண்ணீர் பருகவும்
நிறைய தண்ணீர் பருகினால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறும். இதனால் சருமம் பாதிப்படைவதையும், முகப்பருக்கள் வருவதையும் தடுக்கலாம்.

முடியை கட்டவும்
எப்போதும் முடியை முகத்தில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முடியில் உள்ள எண்ணெயால் பருக்கள் அதிகமாகும்.

நன்கு தூங்கவும்
தூக்கமின்மையும் சருமத்தை பாதிக்கும். எனவே எப்போதும் அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில், நன்கு தூங்க வேண்டும். இதனால் முகம் பொலிவோடு பருக்களின்றி இருக்கும்.

ஃபேஸ் பேக்
பருக்களை போக்குவதற்கு பல இயற்கை ஃபேஸ் பேக்குகள் உள்ளன. ஆகவே பருக்களை போக்க வேண்டுமெனில், மேற்கூரிய செயல்களை பின்பற்றி, அத்துடன் ஃபேஸ் பேக்குகளை போட்டால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் வாரத்திற்கு இரண்டு முறை போட வேண்டும்.



Click it and Unblock the Notifications











