Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
வறண்ட சருமத்தை பொலிவாக்கும் வினிகர்!

சருமம் மென்மையாகும்
வெங்காயச் சாறுடன் வினிகரை சில துளிகள் கலந்து முகச் சுருக்கம் உள்ள இடங்களில் பூசி வரவும். தொடர்ந்து சில வாரங்கள் இதை செய்துவர முகச்சுருக்கம் மாறும்.சருமம் உலர்ந்து அரிக்கிறதா? இதனைப் போக்க வினிகர் சிறந்த செயலாற்றுகிறது. பாத்டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் 8 அவுன்ஸ் வினிகர் சேர்த்து 15 நிமிடம் உடம்பை ஊறவைத்து குளிக்கவும். இதனால் அரிப்பு குணமாகும். சருமம் மென்மையாகும்.
உலர் சருமத்தை சீராக்கும்
முகம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? அரை கப் தண்ணீரில் சிறிதளவு வினிகர் ஊற்றி முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதனை செய்துவர முகத்தில் வறட்சி நீங்கி பொலிவு பெறும்.
எண்ணெய் சருமம்
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் அரை கப் வினிகரை தண்ணீரில் கலந்து ப்ரிட்ஜ்ல் ஐஸ் கியூப்பில் ஊற்றி வைக்கவும். பின்னர் அதை எடுத்து முகத்தில் ஒத்தடம் கொடுக்க கோடையில் முகம் குளிர்ச்சியடைவதோடு முகத்தில் எண்ணெய் வடிவது கட்டுப்படும்.
பருக்கள் நீங்கும்
ஒரு ஸ்பூன் தேன், கொஞ்சம் கோதுமை மாவுடன், ஒரு ஸ்பூன் வினிகர் கலந்து பசை போல செய்து இரவில் உறங்கும் முன்னர் முகத்திற்கு பூசவும். மறுநாள் எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பருக்கள் நீங்கி அழகு பெறும். முகச்சுருக்கமும் மாறும்.
உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.
ஷம்பூ போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.
பாதம் மென்மையாகும்
வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும்வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும்.
சரும புத்துணர்ச்சி
ஒரு டீ ஸ்பூன் வெள்ளை வினிகர், 3 டீ ஸ்பூன் பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான சரும டோனர் தயார். முகத்தில் இதைத் தெளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம்.
பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி,சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்.



Click it and Unblock the Notifications











