Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம்
வறண்ட சருமத்தை பொலிவாக்கும் வினிகர்!

சருமம் மென்மையாகும்
வெங்காயச் சாறுடன் வினிகரை சில துளிகள் கலந்து முகச் சுருக்கம் உள்ள இடங்களில் பூசி வரவும். தொடர்ந்து சில வாரங்கள் இதை செய்துவர முகச்சுருக்கம் மாறும்.சருமம் உலர்ந்து அரிக்கிறதா? இதனைப் போக்க வினிகர் சிறந்த செயலாற்றுகிறது. பாத்டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் 8 அவுன்ஸ் வினிகர் சேர்த்து 15 நிமிடம் உடம்பை ஊறவைத்து குளிக்கவும். இதனால் அரிப்பு குணமாகும். சருமம் மென்மையாகும்.
உலர் சருமத்தை சீராக்கும்
முகம் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறதா? அரை கப் தண்ணீரில் சிறிதளவு வினிகர் ஊற்றி முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இதனை செய்துவர முகத்தில் வறட்சி நீங்கி பொலிவு பெறும்.
எண்ணெய் சருமம்
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் அரை கப் வினிகரை தண்ணீரில் கலந்து ப்ரிட்ஜ்ல் ஐஸ் கியூப்பில் ஊற்றி வைக்கவும். பின்னர் அதை எடுத்து முகத்தில் ஒத்தடம் கொடுக்க கோடையில் முகம் குளிர்ச்சியடைவதோடு முகத்தில் எண்ணெய் வடிவது கட்டுப்படும்.
பருக்கள் நீங்கும்
ஒரு ஸ்பூன் தேன், கொஞ்சம் கோதுமை மாவுடன், ஒரு ஸ்பூன் வினிகர் கலந்து பசை போல செய்து இரவில் உறங்கும் முன்னர் முகத்திற்கு பூசவும். மறுநாள் எழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ முகம் பருக்கள் நீங்கி அழகு பெறும். முகச்சுருக்கமும் மாறும்.
உங்கள் சருமம் உலர்ந்த சருமமாக இருந்தாலோ, அல்லது வெடிப்புள்ள சருமமாக இருந்தாலோ வினிகரை தடவினால் குணமாகும்.
ஷம்பூ போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்.
பாதம் மென்மையாகும்
வினிகர் கலந்த நீரில் பாதம் மூழ்கும்வரை அரைமணி நேரம் ஊறவைத்து பின்பு நன்றாக கழுவினால், கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகள் போய், நகங்கள் சொத்தையாக இருந்தாலும் சில நாட்களில் சரியாகிவிடும்.
சரும புத்துணர்ச்சி
ஒரு டீ ஸ்பூன் வெள்ளை வினிகர், 3 டீ ஸ்பூன் பன்னீர் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். மிகச் சிறந்த சமச்சீரான சரும டோனர் தயார். முகத்தில் இதைத் தெளித்துக் கொண்டால், புத்துணர்வைப் பெறலாம். வேக வைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசினால் மாசு மருவற்ற சருமத்தைப் பெறலாம்.
பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி,சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும்.



Click it and Unblock the Notifications











