Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்..
பொலிவான தோற்றத்தைத் தரும் 'தக்காளி ஃபேஸ் பேக்'

தக்காளியானது இயற்கையில் எளிதில் கிடைக்கும். இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இதை வைத்து ஃபேஸ் பேக் செய்வதால், சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இப்போது அந்த தக்காளியை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்வதென்று பார்ப்போம்!!!
1. தக்காளியை வேக வைத்து தோலை நீக்கி, அதனுடன் சிறிது ஓட்ஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு அதனைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சூரிய ஒளி பட்டுப் பட்டு பழுப்பு நிறமாகிய இடம் பொலிவு பெற்று அழகுடன் காணப்படும்.
2. வேக வைத்த தக்காளியோடு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு முகத்தில் தடவி, காய்ந்ததும் அதனை தண்ணீரால் கழுவி வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.
3. மூல்தாணி மெட்டியுடன் தக்காளிச் சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வேண்டும், இல்லையென்றால் உள்ளங்கையை நினைத்து மாஸ்க் மீது மசாஜ் போல் செய்ய வேண்டும். இப்படி 2-3 நிமிடம் மசாஜ் செய்து பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், முகப்பரு, கருவளையம் போன்றவை போய்விடும்.
4. சந்தனப்பவுடர் கூட ஒரு சிறந்த முகத்தை அழகுப்படுத்த உதவும் அழகுப் பொருள். ஒரு பௌலில் சிறிது தக்காளிச் சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சந்தனப்பவுடர் போட்டு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
5. சாதாரணமாக தக்காளியை வேக வைத்து, அதனை மசித்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கருப்பு நீங்கி முகம் அழகாகக் காணப்படும்.
6. எங்கேனும் அவசரமாக செல்ல வேண்டும் என்றால் அப்போது வேக வைத்த தக்காளியுடன் 2 ஸ்பூன் பாலை விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிச் சென்றால், முகமானது பிரகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications