Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
சுருக்கத்தை ஏற்படுத்தும் சில பழக்கங்கள்!!!

1. பெண்கள் தினமும் இரவில் படுக்கும் முன் முகத்திற்கு தடவும் கிரீம் அல்லது லோசனால் முகத்தில் சுருக்கங்கள் வரவில்லை என்று நினைகின்றனர். ஆனால் அது உண்மையல்ல, அந்த கிரீம் அல்லது லோசனை முகத்தில் தடவி மசாஜ் செய்யும் போது, கைகளை மேல் நோக்கியே மசாஜை தொடங்க வேண்டும். அப்படி செய்யாமல் முதலில் கீழ் நோக்கி செய்தால், முகமானது சுருக்கத்தை தான் அடையும். ஆகவே நாம் செய்யும் மசாஜில் தான் சுருக்கங்கள் வருவதும், வராததும் இருக்கிறது.
2. படுக்கும் போது குப்புற படுக்கக் கூடாது. ஆனால் அது தான் வசதியாக இருக்கும். அப்படி படுக்கும் போது முகமானது, தலையணையால் நீண்ட நேரம் அழுத்தப்பட்டு சருமமானது சுருக்கத்தை அடைகிறது. ஆகவே எப்போதும் நேராக படுக்க துவங்குங்கள்.
3. உடலானது திடீரென்று மெலிந்துவிட்டால் சுருக்கங்கள் ஏற்படும். எதற்காக விரைவில் எடையை குறைக்க வேண்டும். நமது சருமமானது ஒரு எலாஸ்டிக் போல, நாம் எவ்வளவு வேண்டுமானாலும் குண்டு ஆகலாம், அதற்கு ஏற்றாற் போல் நமது சருமமும் விரிவடையும். ஆனால் திடீரென்று மெலிந்து விட்டால், நமது சருமம் உடனே சுருங்காது. அப்போது சுருக்கங்கள் தான் ஏற்படும். ஆகவே பொறுமையாகவே உடல் பருமனை குறையுங்கள்.
4. தினமும் சரியாக தூங்க வேண்டும். வேலைப்பளு அதிகமாக இருக்கிறது என்று வேலை செய்யும் நாட்களில் சரியாக தூங்காமல், வார இறுதியில் நன்றாக தூங்கினால் மட்டும் நல்லதல்ல. ஆகவே தினமும் அழகான தூக்கத்தை தூங்கினால், உடலில் சுருக்கங்கள் தோன்றாது.
5. கண்களில் தூசி விழுந்து விட்டால் கண்களை உடனே விரல்களால் தேய்க்கக்கூடாது. அதற்கு பதிலாக கண்களை தண்ணீரால் கழுவுங்கள். இல்லையென்றால் கண்களைச் சுற்றி சுருக்கங்கள் வர ஆரம்பித்துவிடும்.
6. அடிக்கடி முகத்தை சுளித்துக் கொண்டு இருப்பதாலும், சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் வாயை எப்போதும் குவித்துக் கொண்டு, சுளித்துக்கொண்டு இருந்தால், வாயைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே எப்போதும் சற்று சிரித்துக் கொண்டு இருங்கள், இதனால் முகமானது சுருக்கத்தை அடையாமல் அழகாக இருக்கும்.
ஆகவே அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எப்போதும் சிரித்துக் கொண்டு இருங்கள். மேலும் மேலே சொன்ன செயல்களையெல்லாம் தவிர்த்துவிடுங்கள்.



Click it and Unblock the Notifications