Latest Updates
-
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கை, கால் முடி அழகை கெடுக்குதா? இதை படிங்க...

1. கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு மற்றும் சீயக்காய் பொடி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அத்துடன் எலுமிச்சைத் தோல் மற்றும் வேப்பங் கொழுந்து எடுத்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதோடு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து கலந்து தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் முடியானது படிபடியாக குறைந்து, தோலும் மென்மையாகும். மேலும் சருமத்திற்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகி, எந்த ஒரு தோல் நோயும் எப்போதும் வராது.
2. மாதுளைத் தோல் மற்றும் கருந்துளசியை வெயிலில் நன்கு காய வைத்து, அத்துடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை முட்டையின் வெள்ளைக் கருவோடு கலந்து, தினமும் படுக்கும் முன் முடி உள்ள பகுதிகளில் தடவி, மறுநாள் காலையில் எழுந்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் முடியானது உதிரிந்துவிடும்.
3. கடலை மாவுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து, முடிகள் உள்ள இடங்களான முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஒரு துணியை குளிர்ந்த நீரில் நனைத்து துடைத்தெடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் முடியானது இல்லாமல் போகும்.
4. குப்பைமேனி இலை மற்றும் வேப்பங்கொளுந்து எடுத்து, அதோடு கஸ்தூரி மஞ்சளை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் அந்த கலவையோடு பன்னீர் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் கழுவிட வேண்டும். அதனால் நாளடைவில் முடியானது காணாமல் போகும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்தால் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை வளராமல் ஈஸியாக தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











