Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
வயசு ஆயிட்டாலும், இளமையா இருக்க வேண்டுமா!!!

வயதான சருமத்தை போக்க...
* காலெண்டுலா மலரின் இதழ்களை காய வைத்து, அதனை சூடான நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும். தேன் மெழுகை உருக வைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது காலெண்டுலா எண்ணெயை ஊற்றி நன்கு காய வைத்து, அதில் காலெண்டுல்லா தண்ணீர் மற்றும் தேன் மெழுகை ஊற்றி, சிறிது எலுமிச்சை சாற்றையும் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்க வேண்டும். பிறகு அதனை ஒரு காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு, தினமும் அதனை படுக்கும் முன் தடவி, சற்று நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், சருமம் இறுக்கமடைவதுடன், நன்கு அழகாகவும் மாறும்.
* அவோகேடோ பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் முட்டையை கலந்து, அதனை தடவி நன்கு மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக அந்த கலவையை முகத்திற்க தடவி காய வைக்கும் போது, பேசவோ அல்லது சிரிக்கவோ கூடாது. இத்னை வாரத்திற்கு இரு முறை செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
* ஆப்பிள் மற்றும் அன்னாசிப்பழம் ஒரு சிறந்த ஆன்டி-ஏஜிங் பழங்கள். அதற்கு ஆப்பிள் மற்றும் அன்னாசியை நன்கு நைஸாக மென்மையாக மசித்துக் கொள்ளவும். பின் அதில் சிறிது பாலை விட்டு, சற்று கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதை தினமும் காலையில் குளிப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும். இந்த கலவையை 2-4 நாட்கள் வைத்து கூட பயன்படுத்தலாம். வேண்டுமென்றால் அதில் சிறிது தேனை கலந்து கொள்ளலாம். ஏனெனில் தேன் சருமத்தை சற்று இறுக்கமடையச் செய்யும்.
* சுருக்கத்தை போக்க இது ஒரு சிறந்த மற்றும் ஈஸியான ஆன்டி-ஏஜிங் கிரீம். அதற்கு தேன், தயிர் மற்றும் பாலை ஒரு பௌலில் ஊற்றி, அந்த கலவையை முகத்திற்கு தடவி, மென்மையாக மசாஜ் செய்து, ஒரு 10 நிமிடம் காய வைத்து, பின்பு அதனை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். குளிர்ந்த தண்ணீர் முகத்தில் இருக்கும நுண் துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதாக நீக்கும் தன்மையுடையது.
இத்தகைய இயற்கையான ஆன்டி-ஏஜிங் கிரீம்களை பயன்படுத்தி, முகத்தில் இருக்கும் வயதான தோற்றத்தை நீக்கலாம். மேலும் வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த கிரீம்களை காய வைக்காமல் சற்று ஈரப்பசை இருக்கும் போதே கழுவி விட வேண்டும். அதிலும் அந்த கிரீம்களை குளிர்ச்சியான இடத்தில் வைத்து சேமிக்க வேண்டும். முக்கியமாக தினமும் அதிகமான அளவு தண்ணீரை குடித்தால், சருமம் அழகாக இருப்பதோடு, பளபளப்பாகவும், சுருக்கங்கள் எளிதில் வராமலும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











