Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க...
1. சருமத்தில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அதுவும் முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் அல்ல, கால்களுக்கும் தான். அவ்வாறு ஈரப்பசை இல்லாமல் இருந்தாலும் சுருக்கங்கள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இருமுறை உடம்புக்கு தடவும் லோசனை தடவ வேண்டும். அதுவும் காலையில் குளித்த பின்னும் மற்றும் இரவில் படுக்கும் முன்னும் தேய்த்து 15 20 நிமிடம் தேய்த்து, பிறகே ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் லோசனானது சருமத்தில் நுழைய சிறிது நேரம் ஆகும். ஆகவே இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் நாளடைவில் சுருக்கங்கள் போய்விடும்.
2. சுருக்கங்களை போக்க வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பேக்கை போடலாம். எலுமிச்சை பழச்சாற்றுடன் சிறிது ஆப்பிள் வினிகர் மற்றும் சர்க்கரையை சேர்த்து கால்களுக்கு தடவி 8 10 நிமிடம் தேய்த்து, குளிர்ந்த நீரில் சுத்தமான துணியை நனைத்து துடைக்க வேண்டும். மேலும் துடைக்கும் போது அழுத்தி துடைக்க கூடாது. இதனால் சுருக்கங்கள் மறையும்.
3. நிறைய பெண்கள் சுருக்கங்கள் போக ப்ளீச் செய்வார்கள். ஆனால் அவ்வாறு செயற்கை முறையில் செய்யும் ப்ளீச் செய்தால் சுருக்கங்கள் நிரந்தரமாக போகாது. மேலும் அது சருமத்தை எரித்து விடும். ஆகவே அவ்வாறெல்லாம் ஏற்படாமல் இருக்க இயற்கை முறையே சிறந்தது. அந்த இயற்கை முறைக்கு எலுமிச்சை ப்ளீச் தான் சிறந்தது. சிறிது எலுமிச்சை துண்டை தினமும் கால்களில் தேய்த்து 3 நிமிடம் ஊற விட்டு, பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, பிறகு பாடி லோசனை மறக்காமல் தடவ வேண்டும். ஏனெனில் எலுமிச்சை சருமத்தை வறண்டு விடச் செய்யும்.
4. ஆப்பிள் வினிகர் ஒரு சிறந்த சுருக்கத்தை போக்கும் பொருள். சிறிது ஆப்பிள் வினிகரை குளிக்கும் போது நீரில் விட்டு குளித்தால் நல்லது. வேண்டுமென்றால் தினமும் ஒரு முறை ஆப்பிள் வினிகரால் கால்களை கழுவினால் மிகவும் நல்லது. ஏனெனில் அது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை மற்றும் சுருக்கங்களை எளிதில் நீக்கிவிடும்.



Click it and Unblock the Notifications











