Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க...
1. சருமத்தில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அதுவும் முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் அல்ல, கால்களுக்கும் தான். அவ்வாறு ஈரப்பசை இல்லாமல் இருந்தாலும் சுருக்கங்கள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இருமுறை உடம்புக்கு தடவும் லோசனை தடவ வேண்டும். அதுவும் காலையில் குளித்த பின்னும் மற்றும் இரவில் படுக்கும் முன்னும் தேய்த்து 15 20 நிமிடம் தேய்த்து, பிறகே ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் லோசனானது சருமத்தில் நுழைய சிறிது நேரம் ஆகும். ஆகவே இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் நாளடைவில் சுருக்கங்கள் போய்விடும்.
2. சுருக்கங்களை போக்க வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பேக்கை போடலாம். எலுமிச்சை பழச்சாற்றுடன் சிறிது ஆப்பிள் வினிகர் மற்றும் சர்க்கரையை சேர்த்து கால்களுக்கு தடவி 8 10 நிமிடம் தேய்த்து, குளிர்ந்த நீரில் சுத்தமான துணியை நனைத்து துடைக்க வேண்டும். மேலும் துடைக்கும் போது அழுத்தி துடைக்க கூடாது. இதனால் சுருக்கங்கள் மறையும்.
3. நிறைய பெண்கள் சுருக்கங்கள் போக ப்ளீச் செய்வார்கள். ஆனால் அவ்வாறு செயற்கை முறையில் செய்யும் ப்ளீச் செய்தால் சுருக்கங்கள் நிரந்தரமாக போகாது. மேலும் அது சருமத்தை எரித்து விடும். ஆகவே அவ்வாறெல்லாம் ஏற்படாமல் இருக்க இயற்கை முறையே சிறந்தது. அந்த இயற்கை முறைக்கு எலுமிச்சை ப்ளீச் தான் சிறந்தது. சிறிது எலுமிச்சை துண்டை தினமும் கால்களில் தேய்த்து 3 நிமிடம் ஊற விட்டு, பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, பிறகு பாடி லோசனை மறக்காமல் தடவ வேண்டும். ஏனெனில் எலுமிச்சை சருமத்தை வறண்டு விடச் செய்யும்.
4. ஆப்பிள் வினிகர் ஒரு சிறந்த சுருக்கத்தை போக்கும் பொருள். சிறிது ஆப்பிள் வினிகரை குளிக்கும் போது நீரில் விட்டு குளித்தால் நல்லது. வேண்டுமென்றால் தினமும் ஒரு முறை ஆப்பிள் வினிகரால் கால்களை கழுவினால் மிகவும் நல்லது. ஏனெனில் அது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை மற்றும் சுருக்கங்களை எளிதில் நீக்கிவிடும்.



Click it and Unblock the Notifications