Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
பொலிவிழந்து டல்லாக இருக்கும் முகத்தை பிரகாசமாக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், ஒருவரது ஆரோக்கியம் மட்டுமின்றி, அழகும் பாதிக்கப்படுகிறது. அதுவும் அழகை எடுத்துக் கொண்டால், மாசடைந்த காற்றில் உள்ள நச்சுக்கள் சருமத் துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்துவதோடு, இறந்த செல்களை அதிகம் தேங்க வைத்து, முகத்தை பொலிவிழந்து டல்லாக காட்டுகிறது.
அதேப் போல் மன அழுத்தத்தினால், சரியான தூக்கம் கிடைக்கப் பெறாமல் முகம் எப்போதும் சோர்வாக காணப்படுகிறது. இப்படி பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமானால், ஃபேஸ் பேக்குகள் பெரிதும் உதவி புரியும்.

அதுவும் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே ஃபேஸ் பேக்குகள் போடலாம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும். கீழே முகப்பொலிவை மேம்படுத்தும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மஞ்சள் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடல் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. அரிசி நீர் மாஸ்க்
* சாதம் வடித்த நீரில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. எனவே சாதம் வடித்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பஞ்சுருண்டையை எடுத்து, நீரில் நனைத்து, அதைக் கொண்டு முகத்தில் தடவி 15-20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. மைசூர் தால் ஃபேஸ் பேக்
* மைசூர் பருப்பை நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த பொடியை ஒரு கிண்ணத்தில் சிறிது எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
4. தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது மஞ்சள் தூள் அல்லது பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பஞ்சுருண்டையை பயன்படுத்தி, அதை முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. தக்காளி ஃபேஸ் பேக்
* முதலில் தக்காளியை எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி காய வைக்க வேண்டும்.
* நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முகம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும்.



Click it and Unblock the Notifications