Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழிந்து கருப்பா தெரியுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க..
Skin Care Tips In Tamil: உங்களுக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமா? இப்படி எண்ணெய் பசை சருமம் இருப்பதனால் உங்கள் முகம் எப்போதும் பிசுபிசுப்பாகவும், கருப்பாகவும் தெரிகிறதா? அதோடு பருக்களும் அதிகமாக வருகிறதா? இப்படி முகத்தில் வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்படியானால் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
அதுவும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, முகத்தில் வழியும் எண்ணெய் பசை கட்டுப்படுவது மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். அதோடு பணமும் மிச்சமாகும்.

அப்படி முகத்தில் அதிகமாக வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தவும், அகற்றவும் உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் மைசூர் பருப்பு என்று அழைக்கப்படும் மசூர் பருப்பு. இந்த பருப்பைக் கொண்டு ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுவதன் மூலம், முகம் பளிச்சென்று இருக்கும். இப்போது எண்ணெய் பசை சருமத்தினருக்கான சில மைசூர் பருப்பு ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மைசூர் பருப்பு மற்றும் ரோஸ் வாட்டர் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
2. மைசூர் பருப்பு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஊற வைத்த மைசூர் பருப்பை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக கண்களைச் சுற்றி தடவும் போது கவனமாக தடவுங்கள்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தலாம்.
3. மைசூர் பருப்பு, தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு மைசூர் பருப்பு பேஸ்ட்டுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி, சருமத்தை உலர்த்திய பின், மறக்காமல் லைட் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
4. மைசூர் பருப்பு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஊற வைத்த மைசூர் பருப்பை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை பயன்படுத்தலாம்.
5. மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஊற வைத்த மைசூர் பருப்பை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications