Latest Updates
-
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்!
அதிக செலவு செய்யாம வெள்ளையாகணுமா? அப்ப வாரத்திற்கு 3 முறை இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
Skin Care Tips In Tamil: யாருக்கு தான் வெள்ளையாக ஆசை இருக்காது. நிச்சயம் ஒவ்வொருவருமே தங்களின் சரும நிறத்தை அதிகரிக்க விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு பொருட்களை வாங்கி சருமத்திற்கு பயன்படுத்துவோம்.
ஆனால் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால், சரும செல்கள் தான் சேதமடையும். அதுவும் அதிகமாக சருமத்திற்கு கெமிக்கல்களைப் பயன்படுத்தும் போது, விரைவில் சருமம் முதுமைத் தோற்றத்தைப் பெற்றுவிடும்.

பழங்காலம் முதலாக அழகைப் பராமரிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் தான் பயித்தம் பருப்பு மாவு அல்லது பச்சை பயறு மாவு. பச்சை பயறில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளன. இது சருமத்திற்கு மிகவும் நல்லது.
முக்கியமாக பயித்தம் பருப்பு மாவைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தழும்புகள் போன்றவை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.
மேலும் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, முடியின் நிறமும் மங்கும். அதற்கு பயித்தம் பருப்பைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளை போடுவது சிறந்த பலனைத் தரும். இப்போது சரும நிறம் அதிகரிக்க பயித்தம் பருப்பு மாவைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடுவது என்று காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* முதலில் ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பயித்தம் பருப்பு மாவை எடுத்து, அத்துடன் அதற்கு இணையாக தேனையும் எடுத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் சீராக தடவி, 15-20 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்தசெல்களை நீக்கி, முகத்திற்கு உடனடி பொலிவை அளித்து, சரும நிறத்தை மேம்படுத்திக் காட்டும்.
ஃபேஸ் பேக் #2
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பயித்தம் பருப்பு மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளி ஜூலை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையான தழும்புகளை போக்கி, முகத்தை பிரகாசமாக ஜொலிக்க வைக்கும்.
ஃபேஸ் பேக் #3
* உங்கள் முகம் வெயிலால் கறுமையாகி விட்டதா? அப்படியானால் அந்த கருமையைப் போக்க பயித்தம் பருப்பு மாவு பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு ஒரு பௌலில் பயித்தம் பருப்பு மாவை சிறிது எடுத்து தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு தூங்கும் முன் செய்தால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
ஃபேஸ் பேக் #4
பெண்களே! உங்கள் முகத்தில் முடி அசிங்கமாக வளர்கிறதா? முடியின் வளர்ச்சியை மற்றும் அதன் நிறத்தை மங்க வைக்க வேண்டுமா? அப்படியானால் பின்வரும் பயித்தம் பருப்பு மாவு ஃபேஸ் பேக்கை போடுங்கள்.
* அதற்கு ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் பயித்தம் பருப்பு மாவை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1/2 டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், நீர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி குறைந்து, நிறம் மங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்.



Click it and Unblock the Notifications