Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
உங்க முகம் பொலிவிழந்து கருப்பா இருக்கா? அப்ப வீட்ல இந்த பொருட்களை வெச்சு ஃபேஷியல் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: யாருக்கு தான் நல்ல பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தின் மீது ஆசை இருக்காது. ஒவ்வொருவருமே தங்களின் முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்க வேண்டுமென்றே விரும்புவார்கள். இதற்காக பெண்கள் பலர் அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் முகத்திற்கு ஃபேஷியல், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று போடுவார்கள்.
ஆனால் அழகு நிலையங்களில் போடப்படும் இவை அனைத்துமே கெமிக்கல்களைக் கொண்டு செய்யப்படுபவை. சிலருக்கு இந்த கெமிக்கல்கள் நற்பலனைத் தந்தாலும், இன்னும் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதோடு கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களை தொடர்ந்து கொடுத்தால், சரும செல்கள் பாதிப்படையக்கூடும்.

அதோடு விரைவில் முதுமைத் தோற்றத்தையும் பெறக்கூடும். இதைத் தவிர்க்க ஒரே வழி இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்பது தான். அதுவும் நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யும் ஃபேஷியல், அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றதாக இருக்கும்.
மேலும் ஃபேஷியல் செய்வதால் பெறும் நன்மைகளைப் பற்றி கூற வேண்டுமானால், இது சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும், கரும்புள்ளிகளை நீக்கும், சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்களை நீக்கும், சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையின் அளவு குறையும். கீழே சரும பொலிவை அதிகரிக்கும் சில நேச்சுரல் ஃபேஷியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபேஷியல் #1
* இந்த ஃபேஷியலுக்கு முதலில் ஒரு பௌலில் 3-4 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, 1/2 மசித்த அவகேடோ கூழ், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அவற்றை நன்கு ஒருசேர கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு கைகளை நீரில் நனைத்து, முகத்தை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஷியல் போட்டால், முகம் உடனே பளிச்சென்று காட்சியளிக்கும்.
ஃபேஷியல் #2
* இந்த ஃபேஷியலுக்கு ஏதேனும் பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஜொஜோபா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஷியலை அடிக்கடி பயன்படுத்தினால், முகம் உடனே பளிச்சென்று ஜொலிக்கும்.
ஃபேஷியல் #3
* இந்த ஃபேஷியல் அனைவரது வீட்டிலும் வழக்கமாக இருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடியது.
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ்வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஷியலை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று நேச்சுரல் ஃபேஷியலுமே சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும். அதோடு இந்த ஃபேஷியல் சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ள உதவி புரியும்.



Click it and Unblock the Notifications











