Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
பணம் செலவு செய்யாம வெள்ளையாகணுமா? அப்ப கற்றாழை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Skin Care Tips In Tamil: இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பொதுவாக காணப்படும் ஒரு செடி தான் கற்றாழை. இந்த கற்றாழை ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது என்பதை அனைவருமே அறிவோம். முக்கியமாக கற்றாழை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதைத் தவிர, சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
நீங்கள் உங்கள் அழகை அதிகரிக்க விரும்புகிறீர்களா? உங்கள் அழகை மேம்படுத்த மாதந்தோறும் நிறைய பணத்தை செலவழித்து வருகிறீர்களா? இனிமேல் உங்கள் அழகை மேம்படுத்த அதிக பணம் செலவழிக்க விரும்பவில்லையா? அப்படியானால் இந்த கற்றாழையைக் கொண்டே சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும், அழகையும் மேம்படுத்தலாம்.

அதற்கு கற்றாழையைக் கொண்டு ஒருசில ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தாலே போதும். கீழே சருமத்தின் அழகையும், நிறத்தையும் மேம்படுத்த உதவும் சில கற்றாழை ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை அடிக்கடி பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.
ஃபேஸ் பேக் #1
* நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை மற்றும் பொலிவை அதிகரிக்க விரும்பினால், இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.
* அதற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கை, கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் பேக் #2
* உங்கள் சரும நிறம் கருமையாகி இருப்பது போன்று தென்படுகிறதா? உங்கள் சரும நிறத்தை மேம்படுத்த, இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
* அதற்கு நற்பதமான கற்றாழை ஜெல்லை எடுத்து, அதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒருவேளை உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் குறைவாக எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சாதாரண சருமம் என்றால் சற்று அதிகமாகவே சேர்க்கலாம். இந்த கலவையை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
* பின் அதை தினமும் இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இப்படி செய்து வந்தால், சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் பேக் #3
* உங்கள் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிகிறதா? அப்படியானால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்.
* அதற்கு ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும்.
ஃபேஸ் பேக் #4
* வெயிலில் சுற்றி உங்கள் சரும நிறம் மாறிவிட்டதா? மீண்டும் பழைய நிறத்தைப் பெற வேண்டுமானால், இந்த ஃபேஸ் பேக்கைப் போடுங்கள்.
* அதற்கு துவரம் பருப்பு பொடியை எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல், தக்காளி சாறு, இஞ்சி சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள், இந்த ஃபேஸ் பேக்கை போட்ட பின், சில துளிகள் தேங்காய் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
* இதனால் சருமம் மேலும் வறட்சியடையாமல் இருக்கும்.
ஃபேஸ் பேக் #5
* உங்கள் முகம் பொலிவிழந்து உள்ளதா? உங்கள் முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? அப்படியானால் இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.
* அதற்கு ஒரு பௌலில் சிறிது கற்றாழை ஜெல், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











