Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கோடையிலும் குளு குளு சருமத்திற்கு கேரட் ஃபேசியல் மாஸ்க்!

தற்போது நாம் மாசடைந்த சுற்றுசூழலில் வாழ்ந்து வருகிறோம். இதனால் சருமமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தைக் காக்க வேண்டியுள்ளது.
இந்த கோடையில் சூரிய கதிரானது நம் சருமத்தில் நேராகப் படுவதால் நம் சருமத்திற்கு தேவையான சத்தானது குறைந்து வறண்டு விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சருமத்தை அக்கறையுடன் காக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
கோடை கால வெயில் கொடுமையிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க எத்தனையோ லோஷன்கள் உள்ளிட்டவ இருக்கின்றன. இருந்தாலும், நாம் செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் நம் வீட்டில் இருக்கும் கேரட்டை பயன்படுத்தி பாதுகாக்கலாம். கேரட் நம் உடலுக்கு மட்டும் உகந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் சிறந்தது.
இந்த கேரட் ஃபேசியல் மாஸ்க்கை எண்ணெய் பசை மற்றும் சாதாரண சருமம் உள்ளவர்கள் செய்யலாம். சரி கேரட் ஃபேசியல் மாஸ்க் எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்ப்போமா...
கேரட் ஃபேசியல் மாஸ்க் -செய்முறை
தேவையான பொருட்கள் : 2-3 கேரட் , 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் , 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ்
பயன்படுத்தும் முறை:
கேரட்டை வேகவைத்து மசித்து கொள்ளவும் , பின்னர் அதனுடன் 1/2 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ், தேவையான அளவு தண்ணீர் கலந்து மாஸ்க் செய்யவும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும்.
பிறகென்ன கேரட்டை எடுங்க, பேசியல் மாஸ்க்கை செய்யுங்க, பொலிவான முகத்துடன் வெளியில் கிளம்புங்க..



Click it and Unblock the Notifications