Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சமயலறை கூட ஒரு அழகு நிலையம் தான்!!!

* பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. அதற்கு சமையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியிலேயே மருந்து இருகிறது. மிளகு சிறிது, 1/2 டீஸ்பூன் அரிசியை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை பருக்களின் மீது, வைத்து, காய்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மறைந்துவிடும்.
* மூக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளை நீக்க, சமையலில் பயன்படுத்தும் தக்காளியை தோலுடன் அரைத்து, முக்கில் தடவி, காய விடவும். இதனால் அவை தானாக உதிர்ந்துவிடும். பின் மூக்கு பார்க்க மென்மையாக அழகாக இருக்கும்.
* உதடுகள் நிறமிழந்து, அழகிழந்தது போல் தோன்றுகிறதா? அதற்கு சிறிது பீட்ரூட்டை எடுத்து, அதனை அரைத்து, உதடுகளின் மீது தினமும் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போட்டது போல் காணப்படும்.
* முகத்தில் உள்ள வெயிலினால் ஏற்பட்ட கருமையைப் போக்க, பாலுடன் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி, காய வைத்து, பஞ்சை நீரில் நனைத்து, துடைத்து எடுக்க வேண்டும்.
* அழகைப் பிரதிபதிப்பதில் கண்களுக்கு முக்கிய பங்குண்டு. அத்தகைய கண்களில் சிலருக்கு கருவளையம், களைப்பு போன்றவை ஏற்படும். அவற்றை போக்க வாழைப்பழத்தில் சிறிது பாலை விட்டு, மசித்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
எனவே பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் செல்வதை விட, வீட்டில் சமையலறையில் இருக்கும் பொட்களை வைத்தே, ஈஸியாக அழகைப் பராமரித்து, வீட்டு அழகியாக ஜொலியுங்கள்...



Click it and Unblock the Notifications











