Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
சமயலறை கூட ஒரு அழகு நிலையம் தான்!!!

* பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. அதற்கு சமையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியிலேயே மருந்து இருகிறது. மிளகு சிறிது, 1/2 டீஸ்பூன் அரிசியை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை பருக்களின் மீது, வைத்து, காய்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மறைந்துவிடும்.
* மூக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளை நீக்க, சமையலில் பயன்படுத்தும் தக்காளியை தோலுடன் அரைத்து, முக்கில் தடவி, காய விடவும். இதனால் அவை தானாக உதிர்ந்துவிடும். பின் மூக்கு பார்க்க மென்மையாக அழகாக இருக்கும்.
* உதடுகள் நிறமிழந்து, அழகிழந்தது போல் தோன்றுகிறதா? அதற்கு சிறிது பீட்ரூட்டை எடுத்து, அதனை அரைத்து, உதடுகளின் மீது தினமும் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போட்டது போல் காணப்படும்.
* முகத்தில் உள்ள வெயிலினால் ஏற்பட்ட கருமையைப் போக்க, பாலுடன் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி, காய வைத்து, பஞ்சை நீரில் நனைத்து, துடைத்து எடுக்க வேண்டும்.
* அழகைப் பிரதிபதிப்பதில் கண்களுக்கு முக்கிய பங்குண்டு. அத்தகைய கண்களில் சிலருக்கு கருவளையம், களைப்பு போன்றவை ஏற்படும். அவற்றை போக்க வாழைப்பழத்தில் சிறிது பாலை விட்டு, மசித்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
எனவே பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் செல்வதை விட, வீட்டில் சமையலறையில் இருக்கும் பொட்களை வைத்தே, ஈஸியாக அழகைப் பராமரித்து, வீட்டு அழகியாக ஜொலியுங்கள்...



Click it and Unblock the Notifications