Latest Updates
-
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
கண்களுக்கு செயற்கை கண் இமைகள் வைக்கப் போறீங்களா!!!

செயற்கை கண் இமைகளைப் பொறுத்த டிப்ஸ்...
செயற்கை கண் இமைகள் சற்று பெரிதாக நீளமாக இருக்கும். ஆகவே அப்போது அதனை நம் கண்களுக்கு ஏற்ப சரியான வடிவத்தில் மற்றும் நீளத்தில் ட்ரிம் செய்ய வேண்டும். ஏனெனில் அப்போது தான் அது நம் கண்களுக்கு ஏற்ற அழகைத் தரும். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கும் இமைகள் சற்று வளைந்து சுருண்டு உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
நம் கண்களின் வடிவத்திற்கு ஏற்ப ட்ரிம் செய்த பின்னர், அதனை அப்படியே கண்களில் பொறுத்த முடியாது. மேலும் அதன் முனைகளை நேரடியாக பசையில் தடவியும் கண்களில் வைக்க முடியாது. ஆகவே அப்போது பசையை கைகளின் பின்னால் தடவி, பிறகு கண் இமைகளை ட்வீசர் கருவியைக் கொண்டு, கண்களில் மெதுவாக கவனமாக பொறுத்த வேண்டும். இதனால் கண்களில் பசை பரவாமல் தடுக்கலாம்.
இமைகளை கண்களில் சரியாகப் பொறுத்திய பின், கை விரல்களைக் கொண்டு, சற்று அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தும் போது, பார்த்து கவனமாக அழுத்த வேண்டும். முக்கியமாக அதிக அழுத்தத்தை கொடுக்காமல் இருந்தால் நல்லது. இல்லையென்றால் அது வெளியே வந்துவிடும். அவ்வாறு கண்களில் பொறுத்தியப் பின்னர், விரல்களை அதன் மேல் 30-40 நொடிகள் வைத்து, காய வைக்க வேண்டும். பிறகு மெதுவாக கைகளை எடுக்க வேண்டும்.
எப்போது கண் இமைகள் காய்ந்துவிடுகிறதோ, அப்போது அதன் மேல் மஸ்காராவை தடவலாம். ஏனெனில் மஸ்காரா தடவினால் கண் இமைகள் நீளமாக அழகாக தெரியும். மேலும் மஸ்காரா தடவியப் பின்னரும், விரல்களை வைத்து, இமைகளை சற்று அழுத்த வேண்டும். இது கூட இமைகளை கண்களில் நன்கு பொறுத்த உதவும் ஒரு இயற்கை பொருள். மேலும் மஸ்காராவை போடும் முன், கண் இமைகளை சீவும் சீப்பைக் கொண்டு ஒரு முறை சீவ வேண்டும். இதனால் இமைகள் சரியாக சுருண்டு இருக்கும்.
எப்போது செயற்கை கண் இமைகளைப் பொறுத்துகிறோமோ, அப்போது கண்களுக்கு ஐ-லைனர் போடும் போது, சிறிது இடம் விட்டு போட வேண்டும். இதனால் செயற்கை கண் இமைகள் அழகான தோற்றத்தில் இயற்கை இமைகளைப் போன்று காணப்படும். வேண்டுமென்றால் இந்த ஐ-லைனரை மெல்லியதாகவும், அடர்த்தியாகவும் போடலாம். அது உங்களது விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு செயற்கை கண் இமைகளை பொறுத்தினால், கண்கள் அழகாக காண்பதோடு, முகமும் அழகோடு காணப்படும். முக்கியமாக செயற்கைக் கண் இமைகளை பொறுத்தும் போது, கண்களுக்கு ஐ-ஷாடோ பவுடரை போட வேண்டாம், இதனால் இமைகள் சற்று களைந்தது போல் தோன்றி, அழகைக் கெடுக்கும்.



Click it and Unblock the Notifications