Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
கண்களுக்கு செயற்கை கண் இமைகள் வைக்கப் போறீங்களா!!!

செயற்கை கண் இமைகளைப் பொறுத்த டிப்ஸ்...
செயற்கை கண் இமைகள் சற்று பெரிதாக நீளமாக இருக்கும். ஆகவே அப்போது அதனை நம் கண்களுக்கு ஏற்ப சரியான வடிவத்தில் மற்றும் நீளத்தில் ட்ரிம் செய்ய வேண்டும். ஏனெனில் அப்போது தான் அது நம் கண்களுக்கு ஏற்ற அழகைத் தரும். அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கும் இமைகள் சற்று வளைந்து சுருண்டு உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.
நம் கண்களின் வடிவத்திற்கு ஏற்ப ட்ரிம் செய்த பின்னர், அதனை அப்படியே கண்களில் பொறுத்த முடியாது. மேலும் அதன் முனைகளை நேரடியாக பசையில் தடவியும் கண்களில் வைக்க முடியாது. ஆகவே அப்போது பசையை கைகளின் பின்னால் தடவி, பிறகு கண் இமைகளை ட்வீசர் கருவியைக் கொண்டு, கண்களில் மெதுவாக கவனமாக பொறுத்த வேண்டும். இதனால் கண்களில் பசை பரவாமல் தடுக்கலாம்.
இமைகளை கண்களில் சரியாகப் பொறுத்திய பின், கை விரல்களைக் கொண்டு, சற்று அழுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தும் போது, பார்த்து கவனமாக அழுத்த வேண்டும். முக்கியமாக அதிக அழுத்தத்தை கொடுக்காமல் இருந்தால் நல்லது. இல்லையென்றால் அது வெளியே வந்துவிடும். அவ்வாறு கண்களில் பொறுத்தியப் பின்னர், விரல்களை அதன் மேல் 30-40 நொடிகள் வைத்து, காய வைக்க வேண்டும். பிறகு மெதுவாக கைகளை எடுக்க வேண்டும்.
எப்போது கண் இமைகள் காய்ந்துவிடுகிறதோ, அப்போது அதன் மேல் மஸ்காராவை தடவலாம். ஏனெனில் மஸ்காரா தடவினால் கண் இமைகள் நீளமாக அழகாக தெரியும். மேலும் மஸ்காரா தடவியப் பின்னரும், விரல்களை வைத்து, இமைகளை சற்று அழுத்த வேண்டும். இது கூட இமைகளை கண்களில் நன்கு பொறுத்த உதவும் ஒரு இயற்கை பொருள். மேலும் மஸ்காராவை போடும் முன், கண் இமைகளை சீவும் சீப்பைக் கொண்டு ஒரு முறை சீவ வேண்டும். இதனால் இமைகள் சரியாக சுருண்டு இருக்கும்.
எப்போது செயற்கை கண் இமைகளைப் பொறுத்துகிறோமோ, அப்போது கண்களுக்கு ஐ-லைனர் போடும் போது, சிறிது இடம் விட்டு போட வேண்டும். இதனால் செயற்கை கண் இமைகள் அழகான தோற்றத்தில் இயற்கை இமைகளைப் போன்று காணப்படும். வேண்டுமென்றால் இந்த ஐ-லைனரை மெல்லியதாகவும், அடர்த்தியாகவும் போடலாம். அது உங்களது விருப்பத்தை பொறுத்தது.
இவ்வாறு செயற்கை கண் இமைகளை பொறுத்தினால், கண்கள் அழகாக காண்பதோடு, முகமும் அழகோடு காணப்படும். முக்கியமாக செயற்கைக் கண் இமைகளை பொறுத்தும் போது, கண்களுக்கு ஐ-ஷாடோ பவுடரை போட வேண்டாம், இதனால் இமைகள் சற்று களைந்தது போல் தோன்றி, அழகைக் கெடுக்கும்.



Click it and Unblock the Notifications











