Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
புருவங்கள் அழகாக தெரிய இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்!
புருவ முடிகள் ஆரோக்கியத்திற்கு சில சிம்பிள் டிப்ஸ்
ஒருவரின் முகத்தை பார்த்ததுமே கவனிக்கப்படுகிற விஷயங்களில் ஒன்று புருவம். புருவ முடி நம் முகத்தின் அழகையே வேறுபடுத்திக் காட்டும் தனித்துவமாக காட்டக்கூடியது. சிலருக்கு புருவ முடி மெலிதாக இருக்கும்.

இன்னும் சிலருக்கோ நோய்த்தொற்று காரணமாக புருவ முடி உதிர்தல், புருவத்தில் பரு,கொப்பளம் போன்றவை ஏற்படும். இதனால் ஒட்டுமொத்த முகமே பொலிவிழந்து காணப்படும்.

ஆயில் மசாஜ் :
புருவத்தில் உள்ள முடி உதிர்ந்தால் இது நல்ல பலன் கிடைக்கும். ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து டபுள் பாயிலிங் முறையில் சூடாக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் விரல் நுனியில் தொட்டு, புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லி :
நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அதில் அரை டீஸ்ப்பூனும் அதனுடன் ரோஸ்வாட்டர் கலந்து புருவங்களில் தேய்த்து வர கொப்புளங்கள் இருந்தால் மறைந்திடும். வாரத்தில் இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.

வெங்காயம் :
வெங்காயத்தை அரைத்து பிழிந்தால் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை புருவங்களில் தேய்த்து இரண்டு நிமிடங்களில் கழுவிவிடலாம். இதனை தினமும் செய்யலாம். வெங்காயம் கண்களுக்கு எரிச்சலை ஏற்ப்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் புருவங்களில் வைத்திருக்க வேண்டாம்.

சீரகம் :
ஒரு டம்பளர் நீரில் கால் டீஸ்ப்பூன் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும். இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதித்ததும் இறக்கிவிடலாம்.
பின்னர் அது ஆறியதும், மெல்லிய துணியால் அந்த தண்ணீரை நனைத்து புருவங்களில் துடைத்தெடுங்கள். ஒரு நாளில் மூன்று முறை வரை இப்படிச் செய்யலாம்.

உணவு :
விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடலில் தண்ணீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகப்படியான காபி டீ குடிப்பதை தவிர்த்திடுங்கள். சிட்ரஸ் ஆசிட் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு,நெல்லி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

அழகு :
சிலர் புருவங்களுக்கு ஐ ப்ரோ பென்ஸில் கொண்டு வரைவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். எப்போதாவது அல்லது வெளியில் செல்லும் போது மட்டும் என்றால் இப்படிச் செய்யலாம். ஆனால் எப்போதும் புருவங்களுக்கு மை தீட்டிக் கொள்வது என்பது தவறானது.
புருவக்கால்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும். அதனை பென்சில் கொண்டோ அல்லது ஐ ப்ரோ ஷேடோ கொண்டோ நாம் அடைத்து விட்டால் புருவ முடிகள் விரைவில் உதிர்ந்துவிடும்.



Click it and Unblock the Notifications