'இந்த' இரண்டு டீயில் உங்க தலைமுடியை அலசுனீங்கனா...உங்க முடி கருகருன்னு நீளமா வளருமாம் தெரியுமா?

பச்சை மற்றும் கருப்பு தேநீரில் இயற்கையாகவே முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளது.

இன்றைய மக்களின் முக்கிய பிரச்சனையாக தலைமுடி பிரச்சனை உள்ளது. முடி உதிர்தல் மற்றும் உடைதல், நரை முடி, முடி பொலிவிழந்து காணப்படுவது என ஏராளாமான தலைமுடி பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம். பெரும்பலான இளைஞர்கள் நரை முடி பிரச்சனையால் அவதிபடுகின்றனர். செயற்கை ரசாயன தயாரிப்புகளால், உங்கள் தலைமுடி மேலும் பாதிப்புக்குள்ளாகிறது. இயற்கையாக உங்கள் தலைமுடிக்கு சாயம் பயன்படுத்த தேநீரை பயன்படுத்தப்படலாம். இது நீண்ட தூரம் செல்லும் எளிய டை விஷயம். தேநீரில் முடியை அலசுதல் என்பது வீட்டிலேயே மேற்கொள்ளப்படும் ஒரு எளிய சிகிச்சையாகும். இது முடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கும் தோற்றத்திற்கும் உதவுகிறது. உங்கள் முடியை அலச நீங்கள் பயன்படுத்தும் தேநீர் வகை மற்றும் பயன்படுத்தப்படும் முறை உங்கள் முடிவுகளை தீர்மானிக்கும்.

Tea Rinse For Hair: Is It Good For Hair Breakage in tamil

பச்சை மற்றும் கருப்பு தேநீரில் இயற்கையாகவே முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளது. அதிக காஃபின் உள்ளடக்கம் இருப்பதால், பிளாக் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் உதிர்வதைத் தடுக்கும். மேலும், அவை முடியின் நிறத்தை அதிகரிக்கவும், பிரகாசத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், தேநீரில் உள்ள ஃபிளாவனாய்டுகள் முடி வளர்ச்சிக்கு உதவும். இக்கட்டுரையில், உங்கள் தலைமுடிக்கு தேநீரை பயன்படுத்துவது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடிக்கு தேநீர் தடவுவதன் நன்மைகள்

முடிக்கு தேநீர் தடவுவதன் நன்மைகள்

முடிக்கு இயற்க்கை சாயமாக செயல்படுகிறது

பெரும்பாலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக நரை முடி பிரச்சனை உள்ளது. வெள்ளை முடியை கறுப்பாக்குவதற்கு பல்வேறு ரசாயன தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், இயற்கை தயாரிப்புகளை பலர் தேடுகிறார்கள். பிளாக் டீயை தலையில் தடவுவது வெள்ளையான முடியை கருப்பாக மாற்ற உதவுகிறது. எனவே பிளாக் டீ, உங்கள் தலைமுடிக்கு கூடுதல் கருப்பு நிறத்தை சேர்க்க உதவும் இயற்கையான மாற்றாகும்.

உலர்ந்த முடியை ஈரப்பதமாக்குகிறது

உலர்ந்த முடியை ஈரப்பதமாக்குகிறது

நிபுணர்களின் கருத்துப்படி, கிரீன் டீயில் கணிசமான அளவு பாந்தெனோல் உள்ளது. இது பி வைட்டமின் ஆகும். ஒரு ஈரப்பதமூட்டும் முகவர் என்று கூறப்படுகிறது. பாந்தெனோல் முடியை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

முடி உதிர்வை நிர்வகிக்கிறது

முடி உதிர்வை நிர்வகிக்கிறது

கிரீன் டீயின் காஃபின் மற்றும் பாலிபினால்கள் முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீன் டீயில் காணப்படும் எப்பிகலோகேட்சின் -3-கலேட்

அலோபீசியா உள்ளவர்களுக்கு முடி உதிர்வதைத் தடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பிரகாசத்தை மேம்படுத்துகிறது

பிரகாசத்தை மேம்படுத்துகிறது

கருப்பு மற்றும் பச்சை தேயிலை மந்தமான முடிக்கு பொலிவை சேர்க்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உங்கள் முடியை கருகருவென மாற்றவும் இது உதவுகிறது.

ஆரோக்கியமான உச்சந்தலை

ஆரோக்கியமான உச்சந்தலை

ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு கூடுதலாக, கருப்பு மற்றும் பச்சை தேயிலை எரிச்சலூட்டும் உச்சந்தலையை ஆற்றுவதற்கு சிறந்தது. கிரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது உச்சந்தலைக்கு நன்மை பயக்கும் மற்றும் பொடுகை எதிர்த்துப் போராடும்.

முடிக்கு தேநீரை எப்படி பயன்படுத்துவது?

முடிக்கு தேநீரை எப்படி பயன்படுத்துவது?

பொடுகு மற்றும் முடி வளர்ச்சிக்கு கிரீன் டீயை பயன்படுத்த வேண்டும். முடி உதிர்தல் மற்றும் முடி கருமையாக மாறுவதற்கு பிளாக் டீயை பயன்படுத்தவும்.

தேவையான பொருட்கள்:

தண்ணீர்

ஒரு ஸ்ப்ரே பாட்டில்

கருப்பு அல்லது பச்சை தேயிலை பை

செய்முறை:

செய்முறை:

2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். குறைந்தது 1 மணிநேரத்திற்கு 4 கருப்பு அல்லது பச்சை தேயிலை பைகளை தண்ணீரில் வைக்கவும். தேநீர் குளிர்ந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். தேநீரை சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவவும். பின்னர், தலைமுடியை உலர வைக்கவும். உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடிக்கு குறைந்தளவு தேநீர் தடவவும், பின்னர் மசாஜ் செய்யவும். ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பையில் அணிந்து 60 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின்னர் உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஈரப்பதத்தை தக்கவைக்க ஆழமான கண்டிஷனரைப் பயன்படுத்தவும்.

எத்தனை முறை பயன்படுத்தலாம்?

எத்தனை முறை பயன்படுத்தலாம்?

தேயிலையை கொண்டு முடியை கழுவுதல் ஒரு எளிதான டை முடி தீர்வாகும். அவற்றை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை கருப்பு தேநீர் கொண்டு முடியை அலச பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நீங்கள் எந்த வகையான கருப்பு தேநீரையும் பயன்படுத்தலாம். அதற்கு பின்னர் உங்கள் முடியை உலர வைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, March 31, 2022, 16:45 [IST]
Desktop Bottom Promotion