Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர நீங்க இத பண்ணா போதுமாம்!
ஆரோக்கியமான கூந்தல் எப்போதும் அழகாக இருக்கும். வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் கண்டிஷனிங் தவிர, ஒருவர் சீரம் மூலம் தலைமுடியைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் மழைக்காலங்களில் புரதத்தை அதிகரிப்பதன் மூலம் அதை வலுப்படுத்த வேண்டும
மழைக்காலம் நல்ல குளிர்ச்சியை நமக்கு கொடுக்கிறது. தற்போது, பருவமழை தொடங்கியதால் கோடை வெயிலின் அவஸ்தையிலிருந்து நாம் ஓய்வு பெறுகிறோம். துரதிர்ஷ்டவசமாக, இந்த அழகான வானிலை முடி ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான மக்கள் மழைக்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக முடி உதிர்வை அனுபவிக்கின்றனர். அதிக ஈரப்பதம் மற்றும் வியர்வை பலருக்கு பொடுகுத் தொல்லையை அதிகரிக்கிறது. முடியை உதிர்த்து, தளர்வானதாகவும், கனமாகவும், உயிரற்றதாகவும் ஆக்குகிறது. எனவே மழைக்காலங்களில் கூந்தலுக்கு சிறந்த பராமரிப்பு தேவைப்படுகிறது.

இதனால் அவை ஆரோக்கியமாகவும் அற்புதமாகவும் இருக்கும். முடி பராமரிப்புக்கான விதி என்னவென்றால், வானிலை மற்றும் வானிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க முடியை உள்ளே இருந்து ஆரோக்கியமாக்கும் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் உங்கள் தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரோக்கியமான தலைமுடி
ஆரோக்கியமான கூந்தல் எப்போதும் அழகாக இருக்கும். வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் கண்டிஷனிங் தவிர, ஒருவர் சீரம் மூலம் தலைமுடியைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் மழைக்காலங்களில் புரதத்தை அதிகரிப்பதன் மூலம் அதை வலுப்படுத்த வேண்டும். பருவத்தில் தயாரிப்புகளை மாற்ற வேண்டிய அவசியத்தையும் ஒருவர் உணர வேண்டும். கோடை அல்லது குளிர்காலத்தில் உங்கள் தலைமுடிக்கு ஏற்ற தயாரிப்பு பருவமழைக்கும் சிறந்த தேர்வாக இருக்காது. வழக்கமான கவனிப்பு மற்றும் சரியான மூலப்பொருள் அடிப்படையிலான தயாரிப்புகள் மூலம், வானிலை சீராக இல்லாவிட்டாலும் ஆரோக்கியமான முடியை உறுதிப்படுத்த வேண்டும்.

உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கவும்
உங்கள் தலைமுடியை மழைநீரில் இருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள். மழை அடிக்கடி மாசு மற்றும் தூசுப் பொருட்களுடன் வருகிறது. எனவே அத்தகைய தண்ணீருக்கு வெளிப்படும் போது உங்கள் முடி சேதமடையக்கூடும். நீங்கள் மழையில் நனைந்தால், வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்யுங்கள்.

தலைமுடியை சுத்தமாக வைத்திருங்கள்
மழை நீர், வியர்வை, மாசு மற்றும் அசுத்தங்கள் உங்கள் முடியுடன் நீண்ட நேரம் தொடர்பில் இருந்தால், அவை அதிக சேதத்தை ஏற்படுத்தும். நல்ல தரமான இயற்கை மூலப்பொருள் அடிப்படையிலான ஷாம்பு மூலம் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். புரோட்டீன் மற்றும் கெரட்டின் நிறைந்த ஷாம்பூவைத் தேர்ந்தெடுக்கவும். ஏனெனில் இது சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் சேதத்தை குறைக்க உதவும்.

போஷாக்குடன் வைத்திருங்கள்
உங்கள் தலைமுடிக்கு தொடர்ந்து ஊட்டமளிக்க வேண்டும். குறிப்பாக மழைக்காலங்களில். உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை வழங்குவதற்கான சிறந்த வழி வாரத்திற்கு இரண்டு முறையாவது நல்ல எண்ணெயை பயன்படுத்துவதுதான். உங்கள் முடி அமைப்பு மற்றும் முடி ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப, ஆர்கன் எண்ணெய், ஆம்லா ஷிகாகாய் ஹேர் டானிக், பிரிங்ராஜ் ரீக்ரோத் ஹேர் ஆயில் அல்லது ரெட் ஆனியன் ஹேர் ஆயில் போன்ற ஒரு நல்ல இயற்கை மூலப்பொருளான ஹேர் ஆயிலைத் தேர்வு செய்யவும்.

எண்ணெயை தடவுங்கள்
சரியான ஹேர் ஆயில் முடி உதிர்வை வியத்தகு முறையில் தடுக்கும். முடிக்கு எண்ணெய் வழங்கும் ஊட்டச்சத்துக்கள் ஒப்பிடமுடியாது, அதனால்தான் பாரம்பரியமாக முடி பராமரிப்புக்கு முடி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பளபளப்பான கூந்தலுக்கு ஒரே இரவு முழுவதும் எண்ணெயை முடியில் தடவி வைத்திருக்கலாம் அல்லது இரண்டு மணி நேரம் வைத்திருந்து முடியை ஷாம்பு போட்டு நன்கு அலசலாம்.



Click it and Unblock the Notifications