Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
தலைமுடி எலி வால் போன்றாவதைத் தடுக்கணுமா? அப்ப இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க...
பிரிங்கராஜ் எண்ணெய் தலைமுடிக்கான ஒரு வரப்பிரசாதம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் சந்தைகள் மற்றும் கடைகளில் பரவலாகக் கிடைத்தாலும் அவற்றுள் அதிகமான கலப்படம் செய்யப்படுகிறது.
தலைமுடி வலிமையாகவும், அழகாகவும், அடர்த்தியாகவும் இருப்பது ஒருவரின் அழகை மேம்படுத்திக் காட்டும். எனவே தலைமுடியை அழகாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்கும், கூந்தல் வேர்களை வலிமையாக வைத்துக் கொள்வதற்கும் நமது முன்னோர்கள் தலைக்கு எண்ணெய் தடவி வரும் வழிமுறையை பின்பற்றி வந்தனர். கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகள் தலைக்கு எண்ணெய் தடவுவதன் மூலம் தீர்க்கப்படலாம். தலை டி உடைவது, பொடுகு போன்ற தலைமுடி தொடர்பான சில குறிப்பிட்ட பாதிப்புகளுக்கு தலைக்கு மூலிகை எண்ணெய் தடவுவது ஒரு சிறப்பான சிகிச்சையாகும்.

பிரிங்கராஜ் எண்ணெய் பற்றி மற்றும் கூந்தலுக்கான அதன் நன்மைகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்த எண்ணெய் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சந்தைகளில் விற்கப்படும் பல எண்ணெய்களில் இந்த மூலிகை எண்ணெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
பிரிங்கராஜ் எண்ணெய் தலைமுடிக்கான ஒரு வரப்பிரசாதம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் சந்தைகள் மற்றும் கடைகளில் பரவலாகக் கிடைத்தாலும் அவற்றுள் அதிகமான கலப்படம் செய்யப்படுகிறது. உண்மையில் உங்கள் கூந்தலுக்கு நீடித்த புத்துணர்ச்சி கிடைக்க வீட்டிலேயே இந்த பிரிங்கராஜ் எண்ணெய்யை ஆர்கானிக் முறையில் தயாரிக்க முடியும். இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

வீட்டில் பிரிங்கராஜ் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
* பிரிங்கராஜ் எண்ணெயை தயாரிக்க, முதலில் பிரிங்க்ராஜ் இலைகளின் சாற்றைப் பிரித்தெடுக்கவும்.
* இந்த சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
* சாறு மற்றும் எண்ணெய்யை ஒன்றாக நன்கு கலந்து குறைந்த வெப்பத்தில் அடுப்பில் வைக்கவும்.
* சாறு எண்ணெயில் முழுவதுமாக கலந்து , எண்ணெய் மட்டுமே மீதம் இருக்கும் போது, அடுப்பை அணைத்துவிடவும்.
* முடி உதிர்தல் பிரச்சினையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த சாறு மற்றும் எண்ணெய்யை அடுப்பில் வைப்பதற்கு முன், அதில் நெல்லிக்காய் சாறு சேர்க்கவும்.

பிரிங்கராஜ் எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
பொடுகு
பிரிங்கராஜ் எண்ணெய் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால், உச்சந்தலையில் தொற்று பாதிப்பு உண்டாகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் பொடுகு பாதிப்பு அறவே நீங்குகிறது. தொடர்ந்து தலைமுடிக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வருவதால் தலைமுடி நரைக்காமல் இருப்பதுடன் கூந்தலின் இயற்கை குளிர்ச்சி தக்க வைக்கப்படுகிறது. பிரிங்கராஜ் எண்ணெய் ஒரு இயற்கையான எண்ணெய் என்பதால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த எண்ணெய் மிகவும் குளிர்ச்சியானது என்பதனால் குளிர்காலத்தில் இரவில் தலைக்கு இந்த எண்ணெய்யைத் தடவிவிட்டு தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

முடி இழப்பு
தலைமுடி இழப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு பிரிங்கராஜ் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது. இந்த எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்வதனால் கூந்தல் வேர்கள் வலிமையடைந்து முடி வளர்ச்சி நின்ற இடங்களில் மீண்டும் முடி வளர தொடங்குகிறது. குறிப்பாக இந்த பலனைப் பெறுவதற்கு தலையில் முடி இல்லாத பகுதிகளில் இந்த எண்ணெய்யைத் தடவி மென்மையாக கைகளால் தொடர்ந்து சில நிமிடங்கள் மசாஜ் செய்து அடுத்த சில மணிநேரம் ஊறவிடவும். பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். தலையை அலசும் போது ஷாம்பு பயன்படுத்துவதை விட சீயக்காய் தூள் கொண்டு அலசுவது இன்னும் சிறந்த பலனைத் தரும். காரணம் இந்நாட்களில் சந்தையில் விற்கப்படும் ஷாம்புவில் அதிக அளவில் ரசாயனம் சேர்க்கப்பட்டு கூந்தலை மேலும் பலவீனமாக்குகின்றன.

கூந்தல் வேரிலிருந்து வலிமையடைகிறது
ஆயுர்வேதத்தின்படி, முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகள் பித்தம் தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படுகின்றன, மேலும் பிரிங்க்ராஜ் எண்ணெய் இந்த சிக்கலை சமாளிக்க உதவுகிறது. இது முடி வளர உதவுகிறது. பிரிங்ராஜ் எண்ணெய் கொண்டு தவறாமல் மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது முடி வேர்களை ஊக்குவித்து மற்றும் முடி வளர உதவுகிறது. பிரிங்கராஜ் எண்ணெய்யைத் தயாரிக்கும் போது, சீயக்காய், நெல்லிக்காய் போன்ற பிற மருந்துப் பொருட்களையும் இதில் சேர்க்கலாம். இதுதவிர, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயையும் இதில் சேர்க்கலாம். இவை அனைத்தும் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகின்றன.

வறண்ட மற்றும் அரிக்கும் உச்சந்தலை
உங்கள் தலைமுடி உலர்ந்ததாகவும், உயிரற்றதாகவும் மாறிவிட்டால், வாரத்திற்கு இரண்டு முறையாவது முடியின் வேர்களுக்கு பிரிங்கராஜ் எண்ணெயைப் பூசி, கைகளால் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தைக் கொடுக்கும். இதனால் முடி வறட்சி நீக்கப்படும். இது தவிர, உங்கள் தலைமுடியை தூசி, அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க வெளியே செல்லும் போது, கூந்தலை நன்றாக முடிந்து கொண்டு செல்ல வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications