Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
வழுக்கை மண்டையில கிடுகிடுன்னு முடி வளரணுமா..? அப்போ இந்த 5 வழிகளை செஞ்சா போதும்..!
ஒரு காலத்துல எவ்ளோ முடி இருந்துச்சி தெரியுமா..?! இப்போ எல்லாமே கொட்டி போச்சி... என்று ஆணுகளும், என் முடி 60அடி கூந்தலாக இருந்துச்சி இப்போதான் இப்படி எல்லாமே கொட்டி போச்சி என்று பெண்களும் வேதனையுடன் கூறும் வார்த்தைகளை பல வீடுகளில் கேட்க முடியும். இது போன்ற பிரச்சினைகளை தீர்க்கவே 5 குறிப்புகள் உள்ளது.

குறிப்பாக முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றிற்கு இந்த குறிப்புகள் நன்கு உதவுகின்றன. இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். இத்தனை நாள் நீங்கள் வேதனை பட்ட முடி சார்ந்த பிரச்சினைகளை எளிதில் தீர்க இங்கே எளிமையான வழிகள் உள்ளன. இந்த குறிப்புகளை பயன்படுத்தி வழுக்கைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்.

ஏன் வழுக்கை..?
முடி உதிர்வு அதிகரித்தால் இறுதியாக வழுக்கை தான் பரிசாக கிடைக்கும். முடியை உதிர வைக்க சில காரணிகள் உள்ளன. குறிப்பாக சீரற்ற வாழ்க்கை முறை, முடியை பராமரிக்காமல் இருத்தல், எண்ணெய்யை தவிர்த்தல், மரபணு ரீதியான பிரச்சினைகள் போன்றவற்றை கூறலாம்.

குறிப்பு #1
வழுக்கை மண்டையில் முடியை வளர வைக்கும் எளிய முறை இதுவே. இதற்கு தேவையான பொருட்கள்..
முட்டை 1
கிரீன் டீ 4 ஸ்பூன்

செய்முறை
முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொண்டு, நன்றாக அடித்து கொள்ளவும். பிறகு இதனுடன் கிரீன் டீ சேர்த்து தலைக்கு தடவி அரை மணி நேரம் சென்று தலையை அலசவும். இந்த குறிப்பு முடியை இறுக்கமாக மாற்றும். இதனால் முடி உதிர்வு இருக்காது.

குறிப்பு #2
வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர இந்த குறிப்பு உதவும். அதற்கு தேவையானவை..
கற்றாழை ஜெல் 10 பீஸ்
கிரீன் டீ பேக் 4

தயாரிப்பு முறை
முதலில் வெந்நீரில் டீ பேக்கை ஊற வைத்து, அதன் எசென்ஸ் நீரில் இறங்கும் வரை காத்திருக்கவும். பிறகு கற்றாழையை அரிந்து இந்த நீரையும் இவற்றுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு இதனை தலைக்கு தடவி 20 நிமிட கழித்து தலையை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.

குறிப்பு #3
முடியை கிடுகிடுவென வளர வைக்கும் தன்மை இந்த குறிப்பிற்கு உள்ளது.
தேவையான பொருட்கள் :-
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
கிரீன் டீ 3 ஸ்பூன்

செய்முறை :-
முதலில் கிரீன் டீ உடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் தரவும். 30 நிமிடத்திற்கு பிறகு தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால் வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.

குறிப்பு #4
இழந்த முடியை மீண்டும் பெற இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை...
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
கிரீன் டீ 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் எலுமிச்சை சாறு மற்றும் கிரீன் டீயை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து தலைக்கு தடவ வேண்டும். 20 சென்று தலையை அலசவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முடி மீண்டும் வளரும்.



Click it and Unblock the Notifications