Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
பள்ளி பருவத்தில் இருந்தது போல அடர்த்தியான முடி வேண்டுமா? இதை வாரத்தில் ஒருமுறை செய்தால் போதும்!
பள்ளி பருவத்தில் இருந்தது போல அடர்த்தியான முடி வேண்டுமா? இதை வாரத்தில் ஒருமுறை செய்தால் போதும்!
உங்களது பள்ளி பருவ வாழ்க்கையை கொஞ்சம் நினைவுக் கொண்டு வந்து பாருங்கள்...! அந்த பள்ளி பருவத்தில் நமக்கு இருந்த அந்த இரட்டை நீளமான ஜடைகள் நினைவுக்கு வரும்.. நாம் அனைவரும் நமது கூந்தலை நினைத்து கவலைப்படும் போது, சொல்லும் ஒரே வார்த்தை என்னவென்றால், எனக்கு ஸ்கூல் படிக்கும் போது எவ்ளோ முடி இருந்தது தெரியுமா..? என்பது தான்.. இந்த வார்த்தையை நாம் நமக்கு தெரிந்தே பலரிடம் பலமுறைகள் சொல்லி இருப்போம்..
சில தங்களது சின்ன வயது புகைப்படத்தை காணும் போது எல்லாம், எனக்கு எவ்வளவு முடி இருந்திருக்கிறது, இப்போது இல்லையே என்று ஏக்கம் கொள்வது உண்டு.. உங்களது இழந்த முடியை நீங்கள் மீண்டும் திரும்ப பெற்றால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமா? இல்லையா?
நிச்சயம் அனைவருமே தங்களது சின்ன வயதில் இழந்த முடியை திரும்ப பெற்றால் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள்.. இழந்த முடிகளை மீண்டும் பெற வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சில சின்ன விஷயங்கள் தான். அதே போல செய்ய கூடாத விஷயங்கள் என்று சிலவும் உள்ளன. இந்த பகுதியில் உங்களது இழந்த முடியை மீண்டும் பெற சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயன் பெறுங்கள்...

தினமும் தலையை அலசுவது
நமது சருமத்தில் இயற்கையாகவே சுரக்கும் எண்ணெய்கள் நமது சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே போல தன் நமது தலையில் சுரக்கும் எண்ணெய்களும் நமது முடியின் வேர்க்கால்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவியாக உள்ளன.
ஆனால் யாரோ சொல்லிய சில காரணங்களால் நாம் தினமும் தலைக்கு குளித்துக் கொண்டு இருக்கிறோம். தினமும் தலைக்கு குளிப்பது என்பது முற்றிலும் தவறான ஒன்றாகும். இவ்வாறு செய்வதால் முடியின் வேர்க்கால்கள் விரைவில் வறண்ட தன்மையை அடைந்துவிடும். முடியின் வேர்க்கால்கள் வறண்ட தன்மையை அடைந்து விட்டால் முடி உதிர்வு அதிகமாக உண்டாகும்.

ஷாம்பு
தினமும் தலை முடிகளை அலசுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் தினமும் ஷாம்பு போடுவீர்கள். தினமும் முடிக்கு கெமிக்கலை பயன்படுத்துவது என்பது கூடவே கூடாது. நீங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை முடியை அலசுகிறீர்கள் என்றால் நீங்கள் மையில்ட் ஷாம்புவை பயன்படுத்துவது என்பது சிறந்தது ஆகும்.

வெப்பத்தை தவிர்க்கவும்
நீங்கள் தலைமுடிக்கு வெப்பத்தை அளிப்பதை தவிர்ப்பது நல்லது.. சிலர் தினமும் தலைமுடியை நேராக்க வேண்டும் என்று ஸ்ட்ரைட்டினிங் செய்து கொள்வார்கள். ஹேர் டிரையர்களை பயன்படுத்துவார்கள். இது போன்று செய்வது உங்களது தலைமுடியில் வெடிப்புகளை உண்டாக்கும்.

கண்டிப்பா யூஸ் செய்யனுமா?
நீங்கள் கண்டிப்பாக தலைமுடிக்கு ஸ்ட்ரைட்னர் அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றால் நீங்கள் ஜோஜோபா ( Jojoba ) ஆயில் உள்ள ஷாம்புவை வாங்கி பயன்படுத்த வேண்டியது என்பது அவசியமாகும். இந்த ஆயில் உங்களுக்கு சூட்டில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

கண்டிஸ்னர்
கண்டிஸ்னர் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும். ஆப்பிள் சீடர் வினிகர் உள்ள கண்டிஸ்னர்கள் உங்களது முடியை அதிகமாக உள்ளது போல காட்டும். அதுமட்டுமில்லாமல் இது கூந்தலை மிருதுவாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்
நீங்கள் கண்டிஸ்னருக்கு பதிலாக தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசி முடிந்த பின்னர் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு முடி அளவு ஒரு கப் தண்ணீரில் ஊற்றி, அந்த தண்ணீரை கொண்டு உங்களது கூந்தலை அலசலாம். இதன் மூலமாக உங்களது கூந்தலானது பளபளப்பாக இருக்கும் என்பது உறுதி.

ஹேர் மாஸ்க்
நீங்கள் வாரத்தில் இரண்டு முறைகளாவது ஹேர் மாஸ்க்குகளை உபயோகப்படுத்த வேண்டியது என்பது அவசியமாகும். உங்களது நாள்கட்டியில் ஹேர் மாஸ்க் போடுவதற்கு என்று ஒரு சில நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாளில் கண்டிப்பாக ஹேர் மாஸ்க் போட மறந்துவிடாதீர்கள்.

தண்ணீர்
ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்றால் கண்டிப்பாக தண்ணீர் அதிகளவில் பருக வேண்டியது என்பது அவசியமாகும். உடல் வறட்சியடைந்து இருப்பது என்பது உங்களது கூந்தலை வறட்சியடைய வைக்கும். கூந்தலில் உயிரோட்டம் என்பது இருக்காது.
உங்களது கூந்தல் வலிமையானதாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தினசரி 8 முதல் 10 டம்ளர் அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமாகும்.

ஆரோக்கியமான உணவு
நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை பொருத்து தான் நமது ஆரோக்கியமும் அமைகிறது. நீங்கள் சாப்பிடும் பொருட்களை வைத்து தான் உங்களது சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் அமைகிறது. துரித உணவுகள், கடைகளில் கிடைக்கும் சுத்தமற்ற உணவுகளை உண்பதால் உங்களது கூந்தலுக்கு ஆரோக்கியம் இல்லாமல் போகும்.

செம்பருத்தி - யோகார்ட் மாஸ்க்
ஃப்ரஷான செம்பருத்தி மலர்கள் - 10
யோகார்ட் - 4 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
ரோஸ்மெரி எண்ணெய் - சில துளிகள்(விருப்பமிருந்தால்)

செய்முறை
செம்பருத்தியின் தண்டினையும், அடிபாகத்தில் உள்ள புற இதழ்களையும் அகற்றி விட வேண்டும். அவற்றுடன் யோகார்ட் கலந்து மிக்ஸியில் நைஸாக பேஸ்ட் போன்று அரைக்கவேண்டும். தேவைக்கேற்ப நீர்விடவும். அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதனுள் தேனை சேர்க்க வேண்டும்.
விருப்பமிருந்தால் ரோஸ்மெரியை அதனுடன் சேர்க்கலாம். ரோஸ்மெரி எண்ணெய் கூந்தல் வளர உதவி புரிகிறது. இப்போது இந்த கலவையை தலைமுடியின் வேர் கால்களிலிருந்து தடவ வேண்டும். முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கழித்து அலசலாம்.

செம்பருத்தி - வெந்தய மாஸ்க்
செம்பருத்தி இலைகள் - கை நிறைய
ஊற வைத்த வெந்தயம் - 2 தேக்கரண்டி (இரவில் ஊற வைத்து மறுநாள் உபயோகப்படுத்த வேண்டும்)
செம்பருத்தி இலையை அழுக்கு போக நன்கு கழுவ வேண்டும். அதன் காம்பினை அகற்றி மிக்ஸியில் நைசாக அரைக்கவும். ஊற வைத்த வெந்தயத்தையும் நன்கு அரைத்து, செம்பருத்தி இலை பேஸ்ட்டுடன் நன்கு கலக்கவும்.

பயன்படுத்தும் முறை
இப்போது அந்த கலவையை தலைமுடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது கூந்தலின் வலிமையை அதிகப்படுத்தும்.
இந்த இரண்டு மாஸ்க்கையும் வாரம் ஒரு முறை என மாற்றி மாற்றி தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு தொல்லை மற்றும் அனைத்து விதமாக கூந்தல் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.



Click it and Unblock the Notifications