Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
தலைமுடி உதிர்தல், முடி வறட்சி, முடி வெடிப்பு அனைத்திற்கும் தீர்வு தரும் ஓர் எளிய வீட்டு சிகிச்சை!
இங்கு முடி உதிர்தல், முடி வறட்சி, முடி வெடிப்பு போன்றவற்றில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத வீட்டு சிகிச்சை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? முடி அதிகம் வறட்சியடைந்து மென்மையிழந்து உள்ளதா? முடியின் முனைகளில் வெடிப்புக்கள் அதிகமாக உள்ளதா? கவலையை விடுங்கள். உங்கள் தலைமுடியின் வலிமையை அதிகரிக்கவும், அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஓர் அற்புத வழி உள்ளது.

அதுவும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து, அடிக்கடி பயன்படுத்தி வந்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம். சரி, இப்போது முடி உதிர்தல், முடி வறட்சி, முடி வெடிப்பு போன்றவற்றில் இருந்து விடுவிக்கும் ஓர் அற்புத வீட்டு சிகிச்சை குறித்து காண்போம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 மூடி
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை #1
முதலில் நற்பதமான தேங்காயை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்து, பின் லேசாக நீர் சேர்த்து வடிகட்டி பயன்படுத்தி வடிகட்டி தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2
பின் அத்துடன் ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பிறகு தயாரித்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவ வேண்டும். இப்படி தலை முழுவதும் இதைத் தடவ வேண்டும். பின் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

செய்முறை #4
அடுத்து 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு:
முடி வெடிப்பு அதிகம் இருந்தால், கத்தரிக்கோலால் அவற்றை வெட்டி நீக்கிவிட்டு, பின் இந்த கலவையைப் பயன்படுத்துங்கள். இதனால் இனிமேல் வெடிப்பு வராமல் இருப்பதோடு, முடியும் நன்கு வளர்ச்சி பெறும். அதே நேரத்தில் தலைமுடி நன்கு மென்மையாக பட்டுப் போன்றும், பொலிவோடும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











