Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா?
எல்லாருக்கும் அழகான நீண்ட கூந்தலுக்கு ஆசை இல்லாமல் இருக்காது. ஆனால் சுகாதரமில்லாத சுற்றுப்புறத்தினாலும், கூந்தலுக்கு சரியான ஊட்டம் இல்லாததாலும், நம் கூந்தல் பாதிக்கபடுகின்றன. கூந்தல் நுனி பிளவு பட்டு, உதிர்ந்து போஷாக்கில்லாமல் டல்லடிக்கின்றன.

மார்கெட்டுகளில் நம் கூந்தலை குறி வைத்து எத்தனையோ ஷாம்புக்கள் எண்ணெய்கள் வந்தாலும் , கூந்தல் வளர்ச்சிக்கு , நம் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை அடிச்சுக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இவற்றால் பக்க விளைவுகள் இல்லை.
இவற்றில் பலன்கள் ரசாயனம் கலந்து விற்கும் எண்ணெய்,ஷாம்புக்களை விட அதிகம். ஆகவே வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே உங்கள் கூந்தலை பொலிவாகுங்கள்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் :
ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய இந்த இரு பொருட்களும் கூந்தல் பராமரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆலிவ் எண்ணெய் பாதிக்கப்பட்ட கூந்தலினை சரி செய்கிறது. நுனி பிளவு மற்றும் வறட்சியை போக்குகிறது.
தேன் , ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. பொடுகினைப் போக்கி, வேர்க்கால்களுக்கு போஷாக்கினைத் தருகிறது.
இப்படி மகத்துவம் வாய்ந்த இந்த இரு பொருட்களையும் சேர்த்தால் , உங்கள் கூந்தல் ஜொலிக்காமல் என்ன செய்யும். உபயோகித்துப் பாருங்கள்.பின் உணர்வீர்கள்.
எவ்வாறு தலையில் உபயோகப்படுத்தலாம்?
ஒரு கப் ஆலிவ் எண்ணெயில், அரைக் கப் தேன் சேர்த்து ,நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.அதனை லேசாக சூடு செய்து கொள்ளுங்கள். முதலில் கூந்தலை நன்றாக நீரில் கழுவிக்கொள்ளுங்கள். பிறகு லேசாக ஈரம் இருக்கும்படி காய வைத்து ,அதன் பின் இந்த எண்ணெய்க் கலவையை தலையின் ஸ்கால்ப்பிலிருந்து, நுனி வரை தடவி மசாஜ் செய்யுங்கள். 30 நிமிடங்கள் பிறகு கூந்தலை நன்றாக எண்ணெய் போகும்படி அலாசுங்கள்.
இன்னும் அருமையான ரிசல்ட் கிடைக்க, கூந்தலில் இந்த கலவையை போட்டபின், ஒரு வெதுவெதுப்பான ஈர டர்க்கி துண்டில் தலைமுழுவதும் கட்டிவிடவேண்டும்.
இதனால் கூந்தலுக்கு நல்ல ஈரத்தன்மை கொடுத்து, அங்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தலை இன்னும் வளரச் செய்யும்.
இந்த இரு கலவைகளும், கூந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் போக்குகிறது. போஷாக்கு அளித்து, பொடுகு,அரிப்பு ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறது. நுனி பிளவுதான் கூந்தல் உதிர்வதற்கு காரணம். இதற்கும் இந்த கலவை தீர்வு தருகிறது.
இந்த கலவையை 15 நாட்களுக்கு அல்லது மாதம் மூன்று முறை போடலாம். அப்புறம் பாருங்கள்.எல்லாரும் பொறாமைப்படும்படி , தங்கு தடையில்லாம் உங்கள் கூந்தல் வளரும்.நீங்களும் விதவிதமாய் ஹேர் ஸ்டைல் போட்டு அழகுக்கு அழகு சேர்க்கலாம்.



Click it and Unblock the Notifications













