கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!

By Maha

முடி என்று வரும் போது, அதனை சரியாக பராமரிப்பது என்பது அதற்கு முறையாக எண்ணெய் பயன்படுத்தி வருவதில் தான் உள்ளது. அதில் வாரம் ஒருமுறை தலைக்கு வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வருவது தான் சிறந்த ஐடியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி செய்தால் முடி மென்மையாக பட்டுப் போன்று இருப்பது மட்டுமல்லாமல், முடியின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், முடிக்கு வெறும் எண்ணெய் வைத்து குளித்தால் மட்டும் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று நினைக்க வேண்டாம். இது அடிப்படையே தவிர, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தலைக்கு குளிக்கும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒருசிலவற்றை செய்து வந்தால், முடியின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும்.

சரி, இப்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் ஈ மாத்திரைகள்

வைட்டமின் ஈ மாத்திரைகள்

விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவும் போது, அத்துடன் வைட்டமின் ஈ மாத்திரைகளை அத்துடன் சேர்த்து கலந்து, பின் அந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்வதைத் தடுக்கலாம். அதிலும் அந்த எண்ணெயை தலைக்கு தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முடியை அலசி, இயற்கையாக உலர வைக்க வேண்டும்.

தயிர் மற்றும் முட்டை மாஸ்க்

தயிர் மற்றும் முட்டை மாஸ்க்

இல்லாவிட்டால், தயிர் மற்றும் முட்டையை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தடவி நன்கு ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலசினால், முடிக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருப்பதுடன், முடியும் நன்கு கருமையாக ஆரோக்கியமாக வளரும்.

வாழைப்பழ மாஸ்க்

வாழைப்பழ மாஸ்க்

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், பொலிவிழந்து காணப்படும் முடியானது நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பு

இரவில் படுக்கும் போது 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 முட்டையை நன்கு அடித்து ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

தயிர்

தயிர்

மேற்கூறிய எதுவும் முடியாவிட்டால், தயிரைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, அலசுங்கள். இதனாலும் முடி நன்கு பட்டுப் போன்று வறட்சியின்றி இருக்கும்.

குறிப்பு

குறிப்பு

எப்போதும் தலைக்கு குளிக்கும் போது சுடுநீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சுடுநீர் தலைமுடியை வறட்சியடையச் செய்வதுடன், முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்துங்கள். ஒருவேளை முடியாவிட்டால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, June 28, 2014, 16:10 [IST]
Desktop Bottom Promotion