Latest Updates
-
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!
முடியை குளிர்ச்சியாக வைக்கும் தயிர் ஹேர் மாஸ்க்...
அழகுப் பராமரிப்பில் தயிர் மிகவும் இன்றியமையாத ஒரு அழகுப் பொருள். அதிலும் முகப்பரு, பழுப்பு நிற சருமம் மற்றும் வறட்சியைப் போக்குவதற்கு சிறந்த பொருள். கோடையில் வெயில் அதிகம் என்பதால், முடி மிகவும் வெப்பமடைந்து உடைய ஆரம்பிப்பதோடு, உதிரவும் ஆரம்பிக்கும். ஆனால் தயிரை வைத்து முடியை குளிர்ச்சியுடன் வைக்கலாம். அதுமட்டுமின்றி தயிர் தலையில் இருக்கும் பொடுகை போக்கவும், முடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனராகவும் இருக்கும்.
இப்போது அந்த தயிரை வைத்து, எப்படியெல்லாம் முடிக்கு ஹேர் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போமா!!!
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு
தயிரை ஒரு பெரிய பௌலில் அடித்துக் கொண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து, முடிக்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் பொடுகை போக்கும் ஷாம்பு போட்டு முடியை அலசினால், பொடுகுத் தொல்லை நீங்கி, முடி குளிர்ச்சியுடனும் இருக்கும்.

தயிர் மற்றும் வெங்காய சாறு
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொண்டு, அதில் தயிரை சேர்த்து, நன்கு கலந்து, ஸ்கால்ப்பில் தடவினால், ஸ்கால்ப்பில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி. பேன் தொல்லையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
தயிர் மற்றும் வெந்தயம்
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து, அதனை தயிருடன் சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, நீரில் அலசினால், உடல் வெப்பம் தணிவதோடு, முடியும் பொடுகின்றி, வலுவுடன் வளரும்.
தயிர் மற்றும் மருதாணி இலை
தயிர் ஒரு சிறந்த கண்டிஷனர். அத்தகைய தயிரில் மருதாணி இலையை ஊற வைத்து அரைத்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி மென்மையாகவும், பட்டுப் போன்றும் மின்னும். குறிப்பாக இந்த முறையில் நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டாம். ஏனெனில் இவை இரண்டுமே மிகுந்த குளிர்ச்சி தன்மை உடையவை. இதனால் சளி பிடித்துக் கொள்ளும். எனவே குறித்த கால அளவு மட்டும் ஊற வைத்து குளிக்கவும்.



Click it and Unblock the Notifications