Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
நீச்சல் பழகுறவங்களா நீங்க? அப்ப முடியை சரியா கவனிங்க...
அக்காலத்தில் எல்லாம் நீச்சல் பழக வேண்டுமெனில் குளம், கிணறு, ஆறு போன்ற இடங்களுக்கு சென்று தான் கற்றுக் கொள்வோம். அந்த இடங்களில் உள்ள தண்ணீர் எல்லாம் மிகவும் சுத்தமானது. ஆனால் இன்றைய காலத்தில் அத்தகைய இடங்களுக்கு செல்ல நேரம் இல்லாததால், பலர் நீச்சல் பழக வேண்டுமெனில், நகர் புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளத்திற்கு சென்று தான் பயிற்சி பெற வேண்டியுள்ளது. மேலும் இந்த நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் குளோரின் சேர்ப்பதால், அவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கூந்தல் தான் அதிகம் பாதிக்கப்படும்.
ஆகவே குளோரின் தண்ணீர் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிலும் போது, கூந்தலை தவறாமல் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதிலும் நீச்சல் குளத்தில் இறங்கும் முன்னும், பின்னும் ஒருசில செயல்களை தவறாமல் செய்ய வேண்டும். அத்தகைய செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், கூந்தலில் எந்த பிரச்சனையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

* நீச்சல் குளத்தில் இறங்கும் முன், கூந்தலை மறக்காமல் நீரில் அலச வேண்டும். ஆனால் ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், அதுவே கூந்தலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
* நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் இருப்பதால், குளத்தில் இறங்கும் முன், தலைக்கு தொப்பியை அணிய வேண்டும். மேலும் அப்படி அணியும் போது, காதுகளையும் சேர்த்து அணிய வேண்டும். அதிலும் லேட்டக்ஸால் செய்யப்பட்ட தொப்பியை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
* நீச்சல் பயின்ற பின், கூந்தலை மறக்காமல் நீரில் அலச வேண்டும். அப்போது நிச்சயம் ஷாம்புவைப் பயன்படுத்தி தலையை அலச வேண்டும். அதுவும் மூலிகை ஷாம்பு அல்லது மைல்டு ஷாம்பு போட்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் முடியில் உள்ள குளோரின் நீக்கப்படுவதோடு, கூந்தல் உதிர்தலும் தடுக்கப்படும்.
* ஷாம்பு போட்டு அலசியப் பின், கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதுவும் இயற்கை கண்டிஷனர்களான வாழைப்பழம் மற்றும் அவகேடோவால் செய்யப்படும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தினால், கூந்தல் மென்மையாக இருக்கும்.
மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு நீச்சல் பயின்றால், கூந்தல் பிரச்சனை இல்லாமல் நீச்சலைப் பயிலலாம்.



Click it and Unblock the Notifications











