Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
கூந்தல் உதிராமல் இருக்க நிறைய தண்ணீர் குடிங்க!

பொடுகு தொல்லை
கூந்தல் உதிர்வதற்காக சரியான காரணத்தை கண்டுபிடித்தாலே போதும் உதிர்வதை தடுத்து விடலாம். ஆனால் பெரும்பாலோனோர் கண்ட கண்ட "ஷாம்பூக்கள்,' "கண்டிஷனர்கள்' உபயோகித்து, பிரச்னையைப் பெரிதாக்கிக் கொள்கின்றனர்.
பொடுகு காரணமாகத்தான் நிறையப் பேருக்கு கூந்தல் உதிரத் தொடங்கி, மெலிந்து, முனை பிளவுபட்டு, முகத்தின் பொலிவையே கெடுப்பது வரை போகிறது. பொடுகு பிரச்னை, முடி உதிர்வு, புழுவெட்டு என முடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கென இருக்கும், நிபுணர்களிடம் செல்ல வேண்டும்.
தலைக்கு எண்ணெய்
எக்காரணம் கொண்டும், கூந்தலை எண்ணெய் தடவாமல், சீப்பு வைத்து வார கூடாது. இப்படிச் செய்வது, நாமே கூந்தலைப் பிடுங்கி எறிவதற்குச் சமம். முடிக்கு எண்ணெய் தடவும் வழக்கமே நிறையப் பேரிடம் குறைந்து விட்டது. எண்ணெய் தடவப் பிடிக்கவில்லை என நினைப்பவர்கள், "ஹேர் வைட்டலைசர்' உபயோகிக்கலாம். இதைப் பயன்படுத்தினால், எண்ணெய் தடவியது போன்று முடி பளபளப்பாக இருக்கும்.
மூன்று நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளிப்பது அவசியம். வாரம் ஒருமுறை அல்லது 15 நாளுக்கு ஒருமுறை எண்ணெய்க் குளியலும் செய்ய வேண்டும். தலைக்குக் குளித்து, முடித்து, கூந்தலைத் துவட்ட கடினமான துணியைப் பயன்படுத்தக் கூடாது. மென்மையான துணியைத் தான் பயன்படுத்த வேண்டும். முடியைக் கசக்கி, முறுக்கி, துவட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் குடிங்க
தினமும் நம் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடிப்பது, மிகவும் அவசியம். இது உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்ற உதவும். தண்ணீரானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு கல்லீரல் சருமம் ஆகியவற்றை பாதுகாக்கிறது. அதோடு கூந்தல் உதிரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்றும் அழகியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.



Click it and Unblock the Notifications











