Latest Updates
-
சாணக்கிய நீதி படி ஒரு பெண்ணை சிறந்த மனைவியாக 5 குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்க மனைவியிடம் இருக்கா? -
Vaikasi Matha Rasipalan 2026: வைகாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 15 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சவால்களால் ரொம்ப கஷ்டப்பட போறாங்களாம் -
13 வருடம் கழித்து சனிக்கிழமையில் வரும் சனி ஜெயந்தி: இந்த 3 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்க.. -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தக்காளி சட்னியை இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் அரைச்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
பிரபலங்களின் பிரிவா? வதந்திகளை நம்பி நீங்களும் இப்படித்தான் பேசுகிறீர்களா? உண்மை இதோ! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இந்த பக்குவத்துல மிளகு சிக்கன் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த கணவர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
பொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்...

அதற்கு சிறந்த வழி எண்ணெய் மசாஜ் தான். மேலும் அந்த பொடுகை நீக்குவதற்கு நிறைய எண்ணெய்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அது என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தி பொடுகை நீக்குங்கள்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
அனைத்து வீடுகளிலுமே தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெயை வைத்து சூப்பராக பொடுகை நீக்கலாம். அதிலும் அந்த தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாற்றை கலந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த கலவையை தலையில் தடவி, விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதிலும் இதனை குளிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் செய்ய வேண்டும்.
தயிர், பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
பொடுகை நீக்கும் பொருட்களில் சிறந்தது தான் தயிர். இது பொடுகை மட்டும் நீக்குவதோடு, கூந்தலை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாற்றும். பாதாம் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து, வறட்சியை நீக்கும். எலுமிச்சை இறந்த செல்கள் மற்றும் பொடுகை போக்கும். ஆகவே அந்த மூன்று பொருட்களையும் கலந்து, தலைக்கு குளிப்பதற்கு முன் 1 மணிநேரம் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
செம்பருத்தி எண்ணெய்
குளிர் காலங்களில் எண்ணெய் மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனெனில் அப்போது சரும வறட்சி அதிகமாக இருக்கும். இதனால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்றவை அதிகம் ஏற்படும். எனவே அப்போது செம்பருத்தியை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அதனை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் அதனை குளிர வைத்து, இதவில் படுக்கும் போது தலைக்கு தடவி தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.
வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய்
வெந்தயம் பொடுகை எளிதில் நீக்கிவிடும். அதற்கு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, பின் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் கலந்து, தலைக்கு தடவி, 2 மணிநேரம் ஊற வைத்து, பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மையால், பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். பின் கூந்தலும் வலுவடையும்.
நல்லெண்ணெய்
கூந்தல் வறட்சியை போக்கும் எண்ணெய்களில் நல்லெண்ணெயும் சிறந்த ஒன்று. இந்த எண்ணெயை அடிக்கடி தடவி வந்தால், வறட்சி நீங்கி, பொடுகு வராமல் இருக்கும். அதிலும் இதனை லேசாக சூடேற்றி, வேண்டுமென்றால் எலுமிச்சையை சேர்த்து கலந்து, தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால், கூந்தல் நன்கு பொலிவோடு பொடுகின்றி இருக்கும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்தால், பொடுகுத் தொல்லையின்றி இருக்கலாம். மேலும் உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications