Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
கூந்தலுக்கு மெருகூட்டும் ஹேர் மாஸ்க்!

வாழைப்பழம் பட்டர் புரூட் மாஸ்க்
கனிந்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அத்துடன் ஆவகேடோ எனப்படும் பட்டர் ப்ரூட் சேர்த்து மாஸ்க் போடலாம். வாழைப்பழம், பட்டர் ப்ரூட், முட்டையின் வெள்ளைக்கரு, தேன், மோர், ஆலிவ் ஆயில் போன்றவை சேர்த்து மிக்ஸ் செய்து மாஸ்க் போடலாம்.
வேர்களில் படுமாறு இந்த கலவையை பூசவேண்டும். அரை மணிநேரம் ஊறவைத்து மிதமான ஷாம்பு போட்டு அலசினால் கூந்தல் வறட்சி நீங்கும்.
யோகர்டு மாஸ்க்
ஒரு சிலருக்கு கூந்தல் வறண்டு போய் நுனி வெடித்து காணப்படும். அவர்களுக்கு கூந்தலின் ஈரத்தன்மையை மீட்டெடுக்கவும், பட்டுப்போல் பளபளப்பாக மாற்றவும் யோகர்டு உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் கால் கப் யோகர்டு எடுத்து அதில் ஒரு முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை ஊற்றவும். இரண்டையும் நன்றாக அடித்து கலக்கவும். இவற்றை உலர்ந்த கூந்தலில் அனைத்து பாகத்திலும் படுமாறு அப்ளை செய்யவும்.
மாஸ்க் போட்டவுடன் தலையை சுற்றி கவர் செய்யவும். அரைமணி நேரம் ஊறவைத்த உடன் மிதமான ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் தலையை அலசவும். மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறு தலைக்கு மாஸ்க் போட்டால் கூந்தல் வறண்டு போவது நீங்கும்.
ஆவகேடோ எலுமிச்சை பேஸ்ட்
ஆவகேடோ சிறந்த அழகு சாதன பொருள். இந்த பழத்தின் சதைப் பகுதியை எடுத்து அத்துடன் எலுமிச்சை பழச் சாற்றை பிழிந்து விடவும். கடல் உப்பு ஒரு டீ ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு டீ ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்கவும். இதனை தலையில் அப்ளை செய்யவும். அரைமணிநேரம் நன்கு ஊறியபின்னர் இதனை குளிர்ந்த நீரில் தலையை அலசவேண்டும். கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.



Click it and Unblock the Notifications