Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கூந்தலுக்கு மெருகூட்டும் ஹேர் மாஸ்க்!

வாழைப்பழம் பட்டர் புரூட் மாஸ்க்
கனிந்த வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அத்துடன் ஆவகேடோ எனப்படும் பட்டர் ப்ரூட் சேர்த்து மாஸ்க் போடலாம். வாழைப்பழம், பட்டர் ப்ரூட், முட்டையின் வெள்ளைக்கரு, தேன், மோர், ஆலிவ் ஆயில் போன்றவை சேர்த்து மிக்ஸ் செய்து மாஸ்க் போடலாம்.
வேர்களில் படுமாறு இந்த கலவையை பூசவேண்டும். அரை மணிநேரம் ஊறவைத்து மிதமான ஷாம்பு போட்டு அலசினால் கூந்தல் வறட்சி நீங்கும்.
யோகர்டு மாஸ்க்
ஒரு சிலருக்கு கூந்தல் வறண்டு போய் நுனி வெடித்து காணப்படும். அவர்களுக்கு கூந்தலின் ஈரத்தன்மையை மீட்டெடுக்கவும், பட்டுப்போல் பளபளப்பாக மாற்றவும் யோகர்டு உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் கால் கப் யோகர்டு எடுத்து அதில் ஒரு முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை ஊற்றவும். இரண்டையும் நன்றாக அடித்து கலக்கவும். இவற்றை உலர்ந்த கூந்தலில் அனைத்து பாகத்திலும் படுமாறு அப்ளை செய்யவும்.
மாஸ்க் போட்டவுடன் தலையை சுற்றி கவர் செய்யவும். அரைமணி நேரம் ஊறவைத்த உடன் மிதமான ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் தலையை அலசவும். மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறு தலைக்கு மாஸ்க் போட்டால் கூந்தல் வறண்டு போவது நீங்கும்.
ஆவகேடோ எலுமிச்சை பேஸ்ட்
ஆவகேடோ சிறந்த அழகு சாதன பொருள். இந்த பழத்தின் சதைப் பகுதியை எடுத்து அத்துடன் எலுமிச்சை பழச் சாற்றை பிழிந்து விடவும். கடல் உப்பு ஒரு டீ ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு டீ ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்கவும். இதனை தலையில் அப்ளை செய்யவும். அரைமணிநேரம் நன்கு ஊறியபின்னர் இதனை குளிர்ந்த நீரில் தலையை அலசவேண்டும். கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.



Click it and Unblock the Notifications