Latest Updates
-
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்! -
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப நடிகை வைஷ்ணவியின் ஃபேஸ் பேக்கை போடுங்க! -
மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.! -
பலரும் அறியாத இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்.! -
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: குபேரன் அருளால் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறுமாம் -
சுக்கிரன்-சூரியன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகத்தால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
வெயிலை சமாளிக்க உதவும் சுவையான தர்பூசணி தோல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கொளுத்தும் வெயிலால் உங்கள் முடி உடையாமல், கொட்டாமல் இருக்க இந்த எளிய உணவுகளை சாப்பிடுங்க
மென்மையான கூந்தல் வேண்டுமா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க...

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிறிது நேரம் மசாஸ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்புவால் கூந்தலை அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஹென்னா- ஹென்னா கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதேசமயம் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கூந்தல் வறட்சியடையாமலும், உதிராமலும் இருக்க, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை, ஹென்னாவுடன் கலந்து, கூந்தலுக்கு தடவி, ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை- முட்டையை உடைத்து, ஒரு பௌலில் ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து, கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், கூந்தல் நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் பூந்திக்கொட்டை- இது ஒரு சிறந்த ஹேர் மாஸ்க். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயுடன், 3-4 டேபிள் ஸ்பூன் பூந்திக் கொட்டை பவுடரை போட்டு கலந்து, முடிக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வது நிற்பதோடு, கூந்தலின் முனைகளில் ஏற்படும் வெடிப்பும் குறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை- தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சிறிது மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு எண்ணெய் பசையுடன இருப்பதோடு, பொடுகு இல்லாமலும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை- கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் பட்டுப் போன்று இருக்க, தேங்காய் எண்ணெயுடன் முட்டையை கலந்து, கூந்தலுக்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். முக்கியமாக குளிக்கும் போது நன்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இல்லையெனில் முட்டை வாசனை வரும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, மென்மையாக பொலிவோடு காணப்படும்.



Click it and Unblock the Notifications











