Latest Updates
-
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
மென்மையான கூந்தல் வேண்டுமா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க...

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிறிது நேரம் மசாஸ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்புவால் கூந்தலை அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஹென்னா- ஹென்னா கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதேசமயம் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கூந்தல் வறட்சியடையாமலும், உதிராமலும் இருக்க, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை, ஹென்னாவுடன் கலந்து, கூந்தலுக்கு தடவி, ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை- முட்டையை உடைத்து, ஒரு பௌலில் ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து, கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், கூந்தல் நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் பூந்திக்கொட்டை- இது ஒரு சிறந்த ஹேர் மாஸ்க். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயுடன், 3-4 டேபிள் ஸ்பூன் பூந்திக் கொட்டை பவுடரை போட்டு கலந்து, முடிக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வது நிற்பதோடு, கூந்தலின் முனைகளில் ஏற்படும் வெடிப்பும் குறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை- தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சிறிது மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு எண்ணெய் பசையுடன இருப்பதோடு, பொடுகு இல்லாமலும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை- கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் பட்டுப் போன்று இருக்க, தேங்காய் எண்ணெயுடன் முட்டையை கலந்து, கூந்தலுக்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். முக்கியமாக குளிக்கும் போது நன்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இல்லையெனில் முட்டை வாசனை வரும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, மென்மையாக பொலிவோடு காணப்படும்.



Click it and Unblock the Notifications