Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
மென்மையான கூந்தல் வேண்டுமா? தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணுங்க...

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்- கூந்தலை நன்கு ஈரப்பசையோடு வைப்பதில் தேங்காய் எண்ணெயும், தேனும் மிகவும் சிறந்தது. ஆகவே அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, ஸ்கால்ப்பிற்கு தடவி, சிறிது நேரம் மசாஸ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்புவால் கூந்தலை அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஹென்னா- ஹென்னா கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதேசமயம் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கூந்தல் வறட்சியடையாமலும், உதிராமலும் இருக்க, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை, ஹென்னாவுடன் கலந்து, கூந்தலுக்கு தடவி, ஊற வைத்து பின் குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய், தயிர் மற்றும் எலுமிச்சை- முட்டையை உடைத்து, ஒரு பௌலில் ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து, கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், கூந்தல் நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் பூந்திக்கொட்டை- இது ஒரு சிறந்த ஹேர் மாஸ்க். அதற்கு சிறிது தேங்காய் எண்ணெயுடன், 3-4 டேபிள் ஸ்பூன் பூந்திக் கொட்டை பவுடரை போட்டு கலந்து, முடிக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வது நிற்பதோடு, கூந்தலின் முனைகளில் ஏற்படும் வெடிப்பும் குறைந்துவிடும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை- தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சிறிது மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு எண்ணெய் பசையுடன இருப்பதோடு, பொடுகு இல்லாமலும் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை- கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் பட்டுப் போன்று இருக்க, தேங்காய் எண்ணெயுடன் முட்டையை கலந்து, கூந்தலுக்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். முக்கியமாக குளிக்கும் போது நன்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இல்லையெனில் முட்டை வாசனை வரும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, மென்மையாக பொலிவோடு காணப்படும்.



Click it and Unblock the Notifications