Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆண்களே, அழகான 'ஹேர்' வேண்டுமா?

பெண்கள்தான் தலையலங்காரத்திலும், தலை முடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது பொதுவான கருத்து. அதில் பாதி உணமையும் கூட. அதேசமயம், தற்போதைய இளைஞர்களும் கூட தலை முடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அழகிய, ஸ்டைலான, சற்றே நீளமான தலைமுடியை பல்வேறு ஆண்களும் கூட விரும்புகிறார்கள். அதாவது டோணி ஸ்டைலில் முடி வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது.
தலைமுடிப் பராமரிப்பு, தலைமுடியை நன்றாக வைத்துக் கொள்வது குறித்து சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்.
1. முதலில் நமது தலைமுடியின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது முடி அலை அலையாக இருக்கிறதாஅல்லது சுருள் சுருளாக இருக்கிறதா அல்லது வளைந்து நெளிந்து இருக்கிறதாஅல்லது கோரையாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றார் நாம் பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.
2. இயற்கையான எண்ணெய் வகைகள் நமது தலைமுடியை வலுப்படுத்தும். எனவே அடிக்கடி நமது தலைமுடியை தண்ணீரால் கழுவக்கூடாது. அதற்கு பதிலாக நமது முடியின் மிருதுவான தன்மைக்கு ஏற்றவாறு நல்ல ஷாம்புகளை பயன்படுத்தலாம். பின் இயற்கை முறையிலோ அல்லது நல்ல டர்க்கி துண்டைக் கொண்டோ தலையை நன்றாக காய வைக்க வேண்டும்.
3. ஈரம் காய்வதற்கு முன்பாக தலை வாரினால் அதிகமாக முடி கொட்டிவிடும். எனவே தலை நன்றாக காய்ந்த பிறகுதான் தலை வாரவேண்டும். தலைமடியில் தூசு இருந்தால் விரல்களைக் கொண்டு மிருதுவாக எடுக்க வேண்டும்.
4. ஒரு சில நேரங்களில் நமது தலைமுடி வறட்சியாகக் காணப்படும். அப்போது நல்ல சலூனுக்குச் சென்று ட்ரிம் செய்யலாம். அப்போது நமது முடி அழகாக மாறும்.
5. நீளமான முடியை வளர்க்க விரும்பும் ஆண்கள் முறையான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். உணவில் நிறைய வைட்டமின் சத்துக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. ஃப்ளானல் தலையணைகள் நமது தலைமுடியை விரைவில் உலர்த்திவிடும். எனவே அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது.
7. குறிப்பிட்ட இடைவெளியில் ஹேர் ஸ்பா செய்ய வேண்டும். அது நமது தலைமுடியை மினுமினுப்பாக வைத்திருக்கும்.
பொதுவாக தலைமுடி 30 நாள்களுக்கு அரை இன்ச் அளவிற்குதான் வளரும். எனவே சலூன் போய் வந்தவுடன் முடி நீளமாக வளர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மிகவும் பொறுமையாக, உரிய முறையில் தலைமுடியை பராமரித்து வந்தால் தலைமுடி நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications