அந்தகாலத்தில் அரச குடும்பத்தினர் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுத்திய 4 பொருட்கள் என்னென்ன தெரியுமா?

Hair Care Tips: பழங்காலத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் தலைமுடியை கழுவுவதை மிகவும் ஆரோக்கியமற்ற பழக்கமாக கருதினர், மேலும் மிகவும் அரிதாகவே அதை செய்தனர். ஆனாலும் அவர்களின் கூந்தல் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது, அதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய சில பொருட்கள்தான். அவர்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை உப்பு, கரடி கொழுப்பு, பார்லி ரொட்டி மற்றும் பல பொருட்களை பயன்படுத்தினர்,

அவ்வப்போது ஆட்டு பால் தேநீர், சிவப்பு வேர், வில்லோ வேர் மற்றும் எல்ம் பட்டை ஆகியவற்றைக் கொண்டு கழுவினர். ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் இந்த போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, இது பெண்கள் தண்ணீரைப் பயன்படுத்த வழிவகுத்தது, இறுதியில் 'ஷாம்பு புரட்சிக்கு' வழிவகுத்தது. ஆனால் அதே கலகட்டத்தில், பெண்கள் தங்கள் தலைமுடியை எந்தெந்த பொருட்களை வைத்து கண்டிஷனிங் செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை எந்தெந்த பொருட்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Hair Care Tips Best Ancient Hair Care Rituals

சப்போட்டா எண்ணெய்

வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கர்களால் பயன்படுத்தப்பட்ட சப்போட் எண்ணெய், சப்போட்டா பழத்தின் விதை என்று பிரபலமாக அறியப்படுகிறது. இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய், பொடுகு மற்றும் எரிச்சலூட்டும் உச்சந்தலைப் பிரச்சினைகளைப் போக்கவும், உச்சந்தலையை சீரமைக்கவும், கூந்தல் மீது பயன்படுத்தப்படுகிறது. இந்த விதையில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன மற்றும் முடியை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்கும் சக்திவாய்ந்த பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது எரிச்சலூட்டும் உச்சந்தலையை சரி செய்யும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கற்றாழை

நீண்ட கூந்தல் என்பது பண்டைய காலங்களில் ஆண்களும் பெண்களும் விரும்பிய ஒரு அம்சமாகும், அந்த காலகட்டத்தில் இரு பாலினத்தவரும் தங்கள் கூந்தல் பராமரிப்பு வழக்கத்தில் கற்றாழையை அதிகமாகப் பயன்படுத்தினர். இப்போதும் கற்றாழை பல அழகு சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை வலுப்படுத்துகிறது, எண்ணெய் பசையுள்ள இழைகளைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உச்சந்தலையில் அரிப்பைக் குறைக்க உதவுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இது சிறந்தது, தற்போது 21 ஆம் நூற்றாண்டில் ஹேர் மாஸ்க், கண்டிஷனர்கள், ஷாம்புகள் மற்றும் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

புளிக்க வைக்கப்பட்ட அரிசி தண்ணீர்

யாவ் சமூகத்தினரால் புளித்த அரிசி நீர் பயன்படுத்தப்பட்டது, அவர்களின் நீண்ட மற்றும் பளபளப்பான கருப்பு முடிகள் 80 வயதை எட்டிய பிறகும் சாம்பல் நிறமாக மாறவில்லை. அவர்களின் இந்த தோற்றத்திற்கான ரகசியம் புளித்த அரிசி நீரைப் பயன்படுத்தி அவர்களின் முடி முடியை கழுவியதுதான், இது கூந்தல் இழைகளை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் புளித்த அரிசி நீரில் பயனுள்ள அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்ற தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது பல நன்மைகளை அளிக்கிறது.

முட்டை

புரதச்சத்து அதிகம் உள்ள முட்டைகள், விக்டோரியன் காலத்திலிருந்தே கூந்தல் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முட்டைகளில் வைட்டமின்கள் ஏ, ஈ, பயோட்டின் மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன, அவை அடர்த்தியான கூந்தல் மற்றும் ஆரோக்கியமான உச்சந்தலையை அடைய உதவுகின்றன. முட்டையின் மஞ்சள் கருவை ஹேர் கண்டிஷனராகப் பயன்படுத்துவதும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழியாகும், ஏனெனில் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது மற்றும் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இதன்மூலம் இழைகளை நேர்த்தியாகவும், பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.

Story first published: Sunday, February 22, 2026, 22:54 [IST]
Desktop Bottom Promotion