பொடுகு பிரச்சனைக்கு நீங்க தேங்காய் எண்ணெய் எலுமிச்சையை யூஸ் பண்ணுறீங்களா? அப்ப இத தெரிஞ்சிக்கோங்க!

தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கும் தொல்லைதரும் பொடுகு பிரச்சனையை யாரும் விரும்புவதில்லை. இது மிகவும் ஆபத்தான உடல்நலப் பிரச்சனை இல்லை என்றாலும், அவை ஏற்படுத்தும் அரிப்புகளின் காரணமாக பொடுகு இருப்பது மிகவும் எரிச்சலூட்டும்.

பொடுகு என்பது உச்சந்தலையில் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இது உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் வெகுவாக பாதிக்கிறது. எனவே, உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

Does Coconut Oil And Lemon For Dandruff Actually Work In Tamil

அந்த வகையில், தலைமுறை தலைமுறையாக பொடுகுக்கு கடைபிடிக்கப்படும் ஓர் வீட்டு வைத்தியம் எலுமிச்சை கலந்த தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது. பொடுகுக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை பயன்படுத்துவது நல்ல யோசனையா? இது உதவுமா? என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையில் பொடுகு வெளிப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உச்சந்தலையில் உற்பத்தி செய்யும் எண்ணெய்களை பொடுகு உண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தலையில் தேங்கி நிற்கும் எண்ணெய் பொடுகுத் தொல்லையை உண்டாக்கும். இதற்கு மிகவும் பொதுவான காரணம் உங்கள் தலைமுடிக்கு போதுமான அளவு ஷாம்பு போடாதது என்று நம்பப்பட்டாலும், பொடுகுக்கு இது மட்டும் காரணம் அல்ல.

பொடுகு ஒரு தீவிரமான நோயல்ல, ஆனால் இது உச்சந்தலையில் மிகவும் வறண்டு அரிப்பு பிரச்சனையையும் சேர்த்து ஏற்படுத்தக்கூடும் என்பதால் சிகிச்சை அளிக்காமல் விடக்கூடாது. மேலும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட நீங்கள் வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் வீட்டு வைத்தியம் உங்களுக்கு வேலை செய்யும் என்று அர்த்தமல்ல.

எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய்

பொடுகு தொல்லையை போக்க தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை கலந்து நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், அதை முதலில் நிறுத்துங்கள். ஏனெனில், இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். வறண்ட சருமம், பூஞ்சை அதிகரிப்பு அல்லது பிற அடிப்படை நிலைமைகள் போன்ற பல காரணிகள் பொடுகுக்கு பங்களிக்கக்கூடும்.

பொடுகுக்கு எந்த வகையான எண்ணெயையும் பயன்படுத்துவது நல்ல யோசனையல்ல, ஏனெனில் இது பொதுவாக பெட்ரோஸ்போரா மொபைல் என்ற பூஞ்சையின் வளர்ச்சிக் காரணமாக எண்ணெய் நிறைந்த உச்சந்தலையில் இனப்பெருக்கம் செய்கிறது. எனவே, பொடுகு உள்ள உச்சந்தலையில் தேங்காய் எண்ணெயைத் தடவினால், அது சிக்கலை மோசமாக்கும்.

எண்ணெய் பசையுள்ள உச்சந்தலைக்கு தேங்காய் எண்ணெய் கெட்டது என்றாலும், அந்த கலவையில் எலுமிச்சையைச் சேர்ப்பது பொடுகுத் தொல்லை உள்ளவர்களுக்கு இன்னும் மோசமானது. உச்சந்தலையில் சில சொறி அல்லது செபொர்ஹெக் டெர்மடிடிஸ் அல்லது சில எரிச்சல் ஏற்பட்டால், எலுமிச்சை அதை அதிகரிக்கலாம். எனவே பொடுகு இருந்தால் இவற்றை ஒன்றாக உச்சந்தலையில் பயன்படுத்துவது நல்ல யோசனையல்ல.

பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி?

பொடுகு நிறைந்த உச்சந்தலைக்கு வீட்டு வைத்தியம் சிறந்த தீர்வாக இருக்காது. உங்கள் தலைமுடியை ஒழுங்காக அல்லது தவறாமல் ஷாம்பு கொண்டு அலசாமல் இருப்பது பொடுகுத் தொல்லைக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. தெளிவாகத் தேவையில்லாத எண்ணெய்களை உச்சந்தலையில் பயன்படுத்துவதற்கு பதிலாக, உச்சந்தலையை சரியாக சுத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட, ஷாம்பூவை சரியாக பயன்படுத்தி, உங்கள் தலைமுடியை நன்றாக அலச வேண்டும். உங்கள் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லையை அகற்ற இது போதுமானதாக இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை அடிப்படையில் நீங்கள் வேறு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

Story first published: Thursday, August 24, 2023, 20:10 [IST]
Desktop Bottom Promotion