Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
குளித்து முடித்ததும் ஏன் ஒருவருக்கு வியர்க்கிறது தெரியுமா? அதைத் தடுப்பது எப்படி?
பொதுவாக அதிகம் வியர்த்தால் குளிப்போம். ஆனால் சிலருக்கு குளித்து விட்டு வந்ததும் பயங்கரமாக வியர்ப்பதுண்டு. அது ஏன் என்று எப்போதாவது யோசித்ததுண்டா?
பொதுவாக அதிகம் வியர்த்தால் குளிப்போம். ஆனால் சிலருக்கு குளித்து விட்டு வந்ததும் பயங்கரமாக வியர்ப்பதுண்டு. அது ஏன் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? அல்லது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளதா? ஆம் என்றால், இக்கட்டுரையில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக வியர்வை பலருக்கும் எரிச்சலுணர்வை அதிகரிக்கும். அதுவும் நல்ல குளியலைப் போட்டுவிட்டு வந்ததும் வியர்த்தால் எப்படி இருக்கும். நிச்சயம் கோபம் வரத் தான் செய்யும்.

நீங்கள் சுடுநீரில் குளிப்பவராக இருந்தால், இந்த வியர்வை பிரச்சனையை கட்டாயம் சந்திக்கக்கூடும். ஏனெனில் சுடுநீரில் குளிக்கும் போது சருமம் மற்றும் தலைமுடி குளித்த பின்னரும் தொடர்ந்து வெதுவெதுப்பான நிலையில் இருக்கும். அதோடு சுடுநீரில் இருந்து வெளிவரும் ஆவியானது குளியலறையின் வெப்பநிலையை அதிகரித்து ஒரு வெதுவெதுப்பான உணர்வை அதிகம் கொடுக்கும். இந்நிலையில் உடலின் வெப்பநிலையும் அதிகரித்து, வியர்க்க வைக்கிறது.
மேலும் குளித்து முடித்த பின்னர் உடலை டவல் கொண்ட தேய்த்த துடைப்போம். அப்படி தேய்க்கும் போது சருமத்தில் அதிக உராய்வின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து வியர்க்க வைக்கிறது. சரி, குளித்து முடித்ததும் வியர்க்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

உடலை குளிர்விக்கவும்
ஒருவர் அதிகம் வியர்த்தால், உடனே குளிக்க வேண்டுமென விரும்புவோம். ஆனால் உடற்பயிற்சி செய்து வியர்த்திருந்தால், 25-30 நிமிடம் கழித்தே குளிக்க செல்ல வேண்டும். இது உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுவதோடு, வியர்வையையும் குறைக்க உதவும்.

குளிர்ந்த நீரில் குளிக்கவும்
குளித்த பின் அதிகம் வியர்க்கிறதா? அப்படியானால் சுடுநீரில் குளியலை முடித்த பின்னர், இறுதியில் ஒரு கப் குளிர்ந்த நீரால் உடலை அலசுங்கள். இதனால் உடல் வெப்பநிலை குறைந்து, குளித்த பின் ஏற்படும் வியர்வையைக் குறைக்கலாம்.

குளிர்ந்த நீரால் முடியை அலசவும்
சுடுநீர் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பையும் சூடேற்றும். எனவே தலைக்கு எப்போதும் வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரையே பயன்படுத்த வேண்டும். அதுவும் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசிய பின்னர் மிகுந்த புத்துணர்ச்சியை உணரலாம். அதோடு, தலைக்கு குளித்த பின் முடியை உலர்த்த உடனே ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

சீக்கிரம் குளித்துவிட வேண்டும்
சிலர் மணிக்கணக்கில் குளியலறையில் நேரத்தை செலவழிப்பார்கள். குளித்த பின்னர் வியர்ப்பதற்கு குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதும் ஓர் காரணம். எனவே எவ்வளவு சீக்கிரம் குளித்துவிட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வர முயலுங்கள்.

தொட்டு உலர்த்தவும்
குளித்து முடித்த பின்னர் டவல் கொண்டு உடலை தேய்த்து துடைத்தால், அந்த உராய்வின் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரித்து, வியர்க்க வைக்கும். எனவே எப்போதும் குளித்து முடித்த பின் டவல் கொண்டு ஒத்தி எடுங்கள். அதுவும் கோடைக்காலத்தில், குளித்து முடித்து உடலை துணியால் ஒத்தி எடுத்த பின்னர் டால்கம் பவுடரைப் பயன்படுத்தினால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

குளியலறையில் ஆடைகளை மாற்றுவதைத் தவிர்க்கவும்
பெரும்பாலான மக்கள் குளித்து முடித்த பின்னர் குளியலறையிலேயே தங்களின் ஆடைகளை அணிந்து கொண்டு வருவார்கள். இப்படி குளியலறையில் நீண்ட நேரம் ஈரப்பதமான சூழ்நிலையில் இருந்தால், அது அதிகப்படியான வியர்வைக்கு வழிவகுக்கும். எனவே இதைத் தவிர்க்க, குளித்து முடித்ததும் படுக்கை அறைக்கு வந்து உடையை மாற்றும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











