Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
மழைக் காலத்தில் பாதங்களைப் பாதுகாக்க 5 பக்கா வழிகள்!!!
மழைக் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் பயங்கர சந்தோஷம் தான். வெயிலில் காய்ந்து, வியர்வையில் அவதிப்பட்டு வரும் போது அட்டகாசமாக ஒரு சிறு தூறல் போட்டாலும் போதும். ஹாயாக அதில் நனைந்து மகிழ்வார்கள்.
அதே சமயம் அந்தத் தூறல் சிறிது சிறிதாக அதிகரித்து, பெரும் மழையாகக் கொட்ட ஆரம்பித்தால், சிலருக்குத் திகில் வந்து ஒட்டிக் கொள்ளும். சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, அதில் நடக்கவும், வண்டி ஓட்டவும் மிகவும் பயமாகத் தான் இருக்கும்.
இன்னும் சிலருக்கு மழைக் காய்ச்சல், இருமல், சளி என்று தொடர் தொல்லைகள் வந்து ஆட்டிப் படைக்கும். மழை நீரில் நடப்பதால் சிலருக்குப் பாதங்களில் சேற்றுப் புண் வரவும் வாய்ப்புள்ளது. மழை நீரில் கண்டதும் கலந்து வருவதால், அதில் நடக்கும் போது அவை நம் பாதங்களைப் பதம் பார்க்கலாம். பூஞ்சைத் தொற்றுக்கள் ஏற்படலாம்.
இந்த மழைக் காலத்தில் நம் பாதங்களைப் பாதுகாப்பதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.

சுத்தமாக வைத்திருங்கள்
பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாகத் துடைக்கவும் வேண்டும்.

கால் நகங்களை வெட்டுங்கள்
கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். இதனால் அழுக்கு சேராது. நகம் இல்லாததால் கால்களைக் கழுவுவதும் எளிதாக இருக்கும்.

சரியான காலணிகளை அணியுங்கள்
ஷூக்கள் போட்டு மழையில் நனையும் போதோ அல்லது மழை நீரில் நடக்கும் போதோ, ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் மற்றும் ஹை-ஹீல்ஸ் போடுவதைத் தவிருங்கள். மேலும் எளிதில் காலில் நீர் புகாத காலணிகளைப் பயன்படுத்துவது நலம்!

காலணிகளை சுத்தம் செய்யுங்கள்
கால்களை சுத்தமாக வைத்திருப்பது போல, நம் காலணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். வீடு திரும்பி, கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் நன்றாக உலர வைக்கவும். அவை ஈரமாகவே இருந்தால் நோய்த் தொற்று ஏற்படும், ஜாக்கிரதை!

பெடிக்யூர் செய்யுங்கள்
இந்தக் காலத்தில் அழகு நிலையத்துக்குச் சென்று பெடிக்யூர் செய்வது பெண்களின் வழக்கம். அதை இந்த மழைக் காலத்திலும் கட்டாயம் கடைப்பிடிக்கவும். மேலும் பெடிக்யூர் செய்யும் போது, சுத்தமான உபகரணங்கள் உபயோகிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications