Just In
- 45 min ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 1 hr ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 2 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 3 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Movies ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மழைக் காலத்தில் பாதங்களைப் பாதுகாக்க 5 பக்கா வழிகள்!!!
மழைக் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் பயங்கர சந்தோஷம் தான். வெயிலில் காய்ந்து, வியர்வையில் அவதிப்பட்டு வரும் போது அட்டகாசமாக ஒரு சிறு தூறல் போட்டாலும் போதும். ஹாயாக அதில் நனைந்து மகிழ்வார்கள்.
அதே சமயம் அந்தத் தூறல் சிறிது சிறிதாக அதிகரித்து, பெரும் மழையாகக் கொட்ட ஆரம்பித்தால், சிலருக்குத் திகில் வந்து ஒட்டிக் கொள்ளும். சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, அதில் நடக்கவும், வண்டி ஓட்டவும் மிகவும் பயமாகத் தான் இருக்கும்.
இன்னும் சிலருக்கு மழைக் காய்ச்சல், இருமல், சளி என்று தொடர் தொல்லைகள் வந்து ஆட்டிப் படைக்கும். மழை நீரில் நடப்பதால் சிலருக்குப் பாதங்களில் சேற்றுப் புண் வரவும் வாய்ப்புள்ளது. மழை நீரில் கண்டதும் கலந்து வருவதால், அதில் நடக்கும் போது அவை நம் பாதங்களைப் பதம் பார்க்கலாம். பூஞ்சைத் தொற்றுக்கள் ஏற்படலாம்.
இந்த மழைக் காலத்தில் நம் பாதங்களைப் பாதுகாப்பதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.
சுத்தமாக வைத்திருங்கள்
பூஞ்சைத் தொற்றுக்களிலிருந்து தப்பிக்க, உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். ஒவ்வொரு முறை வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், கால்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவவும். பிறகு, கால்களை ஈரம் போக நன்றாகத் துடைக்கவும் வேண்டும்.
கால் நகங்களை வெட்டுங்கள்
கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்பு தான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். இதனால் அழுக்கு சேராது. நகம் இல்லாததால் கால்களைக் கழுவுவதும் எளிதாக இருக்கும்.
சரியான காலணிகளை அணியுங்கள்
ஷூக்கள் போட்டு மழையில் நனையும் போதோ அல்லது மழை நீரில் நடக்கும் போதோ, ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மழைக் காலத்தில் கேன்வாஸ் ஷூக்கள் மற்றும் ஹை-ஹீல்ஸ் போடுவதைத் தவிருங்கள். மேலும் எளிதில் காலில் நீர் புகாத காலணிகளைப் பயன்படுத்துவது நலம்!
காலணிகளை சுத்தம் செய்யுங்கள்
கால்களை சுத்தமாக வைத்திருப்பது போல, நம் காலணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். வீடு திரும்பி, கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் நன்றாக உலர வைக்கவும். அவை ஈரமாகவே இருந்தால் நோய்த் தொற்று ஏற்படும், ஜாக்கிரதை!
பெடிக்யூர் செய்யுங்கள்
இந்தக் காலத்தில் அழகு நிலையத்துக்குச் சென்று பெடிக்யூர் செய்வது பெண்களின் வழக்கம். அதை இந்த மழைக் காலத்திலும் கட்டாயம் கடைப்பிடிக்கவும். மேலும் பெடிக்யூர் செய்யும் போது, சுத்தமான உபகரணங்கள் உபயோகிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.