இந்த சம்மரில் உங்க சருமம் தங்கம் மாதிரி ஜொலிக்க... இந்த ஆயுர்வேத பவுடரை யூஸ் பண்ணி தினமும் குளியுங்க!

Herbal Bath Powder In Tamil: புத்துணர்ச்சியூட்டும் திருப்பத்துடன் உங்கள் கோடைகால தோல் பராமரிப்பு வழக்கத்தை புதுப்பிக்க வேண்டும். கடுமையான ரசாயன சோப்புகளை தவிர்த்துவிட்டு, மூலிகை குளியல் தூளை பயன்படுத்தவும். உங்கள் சருமம் இயற்கையாக ஜொலிக்க இந்த இயற்கை முறையை பின்பற்றுங்கள்.

கோடை காலத்தில் உங்கள் முகத்திற்கும் உடலுக்கும் கூடுதல் பராமரிப்பையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும். நாம் நமது முகத் தோலை மட்டுமே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கடின உழைப்பு கொடுக்கும் கைகள், சோர்வான பாதங்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட உடல் தோலை மறந்து விடுகிறோம். உங்கள் முழு உடலுக்கும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் ஓர் மூலிகை தீர்வு உள்ளது.

Ayurvedic Herbal Bath Powder For Summer Glowing Skin In Tamil

ரசாயன சோப்புகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, ஆயுர்வேத குளியல் பொடியை முயற்சி செய்யுங்கள். உங்கள் சருமப் பராமரிப்பை உண்மையிலேயே உணர்வுபூர்வமான அனுபவமாக மாற்றும் ஒரு மகிழ்ச்சிகரமான கலவையை வீட்டிலேயே உருவாக்குங்கள்.

சந்தனம், துளசி, வேம்பு மற்றும் ரோஜாவின் நன்மைகளுடன், இந்த கலவை உங்கள் சருமத்தை குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்க உதவும். இரசாயன சோப்புகள் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்றும் ஆயுர்வேத மூலிகை குளியல் தூள் தயாரிப்பது எப்படி என்றும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

சோப்புகள் ஏன் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்?
எல்லா சோப்புகளும் நச்சுத்தன்மை வாய்ந்தவை அல்ல, ஆனால் சந்தையில் உள்ள பல சோப்புகள் மற்றும் பாடி வாஷ்களில் நீண்ட காலத்திற்கு சருமத்தை பாதிக்கும் இரசாயனங்கள் உள்ளன. மூலிகை சோப்புகள் கூட சில நேரங்களில் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். உடலில் ரசாயனம் கலந்த சோப்பைப் பயன்படுத்தினால், குறிப்பாக கோடைக் காலத்தில், வெப்ப சொறி மற்றும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

இந்த சோப்புகள் வியர்வையுடன் வினைபுரிந்து கிருமிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பெரும்பாலான சோப்புகளில் சோடியம் லாரில் சல்பேட் (SLS) உள்ளது. இந்த சோப்புகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது அந்தரங்க பாகங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்த பகுதிகளில் உங்களுக்கு ஏதேனும் தொற்று அல்லது ஒவ்வாமை இருந்தால், SLS இல்லாத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது சிறந்தது.

ஏனெனில், சோடியம் லாரில் சல்பேட் கொண்ட தயாரிப்புகள் உங்கள் நிலையை மோசமாக்கும். வழக்கமான சோப்புகளில் இருக்கும் வாசனை திரவியங்கள், பாரபென்ஸ், சோடியம் லாரில் சல்பேட் மற்றும் ட்ரைக்ளோசன் ஆகியவை சருமத்திற்கு ஏற்றதல்ல.

மூலிகை குளியல் தூள் செய்வது எப்படி?
ஆயுர்வேத நிபுணர்கள் மூலிகை குளியல் தூளை பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.
தேவையான பொருட்கள்

  • சந்தன பொடி
  • துளசி பொடி
  • வேப்பம்பூ பொடி
  • அதிமதுரம் பொடி
  • மஞ்சள் தூள்
  • ரோஜா இதழ் பொடி
  • பன்னீர்

செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக நன்கு கலக்க வேண்டும். போதுமான அளவு தயார் செய்துகொள்ளுங்கள்.ஏனெனில், நீங்கள் அதை தினமும் தயார் செய்ய வேண்டியதில்லை. குளிப்பதற்கு முன், 2 முதல் 3 டீஸ்பூன் மூலிகை குளியல் பொடியை ரோஸ் வாட்டருடன் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும்.

பேஸ்ட்டை உங்கள் முழு உடலிலும் தடவி, தோலை மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் சாதாரண நீரில் கழுவ வேண்டும். சோப்பைப் போலவே தொடர்ந்து பயன்படுத்தவும். உங்கள் சருமம் நீண்ட காலம் இளமையாகவும் அழகாகவும் இருக்கும்.

மூலிகை குளியல் தூள் எவ்வாறு செயல்படுகிறது?
சந்தனத்தின் குளிர்ச்சியான பண்புகள், வேம்பு, மஞ்சள் மற்றும் துளசி ஆகியவற்றில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன், ரோஜாவின் இனிமையான விளைவும், கோடையில் உடலின் தோலில் சூரிய ஒளி மற்றும் சூரியனால் ஏற்படும் பிற விளைவுகளை குறைக்க உதவுகிறது. இந்த குளியல் தூள் உங்கள் சருமத்திற்கு போதுமான குளிர்ச்சியை அளிக்கிறது.

வெப்பத் தடிப்புகளைக் கையாள்வதிலும் இது பயனுள்ளதாக இருக்கும். வெளிப்புறக் குளிர்ச்சியை மட்டுமே வழங்கும் ரசாயனம் நிறைந்த சோப்புகளைப் போலல்லாமல், இந்த குளியல் தூள் உள்ளே இருந்து குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்க உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்குகிறது, அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. மேலும், இது முகப்பரு ஏற்படாமல் தடுக்கிறது, நீண்ட காலத்திற்கு உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

Story first published: Friday, May 19, 2023, 20:18 [IST]
Desktop Bottom Promotion