Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இந்த 4 ராசிக்காரர்களின் கோபம் காட்டுத்தீ மாதிரியாம்... யாராலும் அதை கண்ட்ரோல் பண்ண முடியாதாம்...!
கோபம் என்பது ஒரு சிக்கலான உணர்ச்சியாகும், ஏனெனில் தேவைப்படும் போது கோபப்படாமல் இருப்பதும் நல்லதல்ல, அதேசமயம் அளவிற்கு மீறி கோபப்படுவதும் நல்லதல்ல. ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் அர்த்தமற்ற ஆபத்தான கோபத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், மற்றவர்களின் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ளவே மாட்டார்கள். சில நொடிகளில் அவர்கள் அமைதியிலிருந்து, பெரும் கோபம் என்னும் நிலையை அடைந்து விட முடியும்.
இந்த உலகிலேயே அவர்களுக்கு மிகவும் கடினமான விஷயம் அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்துவதுதான். ஏனெனில் அவர்கள் தங்களின் கோபத்தை தங்களுடைய சிறப்பு குணமாக கருதுகிறார்கள். ஆனால் அவர்களின் கோபம் அவர்களையே அழித்து விடும் என்பதை அவர்கள் அறிவதில்லை. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபப்படுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
கிரகங்களின் தளபதியான செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள், உக்கிரமான மற்றும் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் எப்போதும் எதிர்வினையாற்றுகிறார்கள், அது சூடான வாக்குவாதங்கள் அல்லது கடுமையாக தாக்கும் மோசமான வார்த்தைகளுக்கு வழிவகுக்கும். மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக நீண்ட நேரம் கோபமாக இருக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் கோபமாக இருக்கும் சிறிது நேரத்திற்குள்ளேயே பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவார்கள்.
அவர்களின் கோபம் பெரும்பாலும் ஆர்வம் அல்லது பொறுமையின்மையின் காரணமாக வருகிறது, குறிப்பாக விஷயங்கள் அவர்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக நகரவில்லை என்றால் அவர்களின் கோபம் கட்டுக்கடங்காததாக இருக்கும். நல்ல செய்தி என்னவென்றால், மேஷ ராசிக்காரர்கள் எவ்வளவு விரைவாக கோபமடைகிறார்களோ அவ்வளவு விரைவாக சாந்தமாவார்கள்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக அன்பானவர்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் அவர்களின் பெயருக்கும், பெருமைக்கும் பாதிப்பு ஏற்படும் போது அவர்களின் கோபம் மிகவும் தீவிரமானதாக இருக்கும்.
அவர்கள் அவமரியாதை அல்லது விமர்சனத்தை மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் அவர்களின் எதிர்வினை மிகவும் வெளிப்படையானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். அவர்கள் பழி உணர்ச்சி தீரும் வரை அவர்களின் கோபம் நெருப்பு போல எரிந்து கொண்டே இருக்கும். அந்த நெருப்பு அவர்களையே ஆபத்தில் தள்ளும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும்போது எப்போதும் வெடிக்கும் குணம் கொண்டவர்கள் அல்ல, ஆனால் அவர்களின் உணர்ச்சிகள் ஆழமாகவும் தீவிரமாகவும் இருக்கும். அவர்கள் மற்றவர்களை விட நீண்ட காலம் மனதில் வெறுப்புணர்வைத் தக்க வைத்துக் கொள்ள முடியும், மேலும் அவர்களின் கோபம் வெளிப்படும்போது, அது பெரும்பாலும் ஒரு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்.
மேஷம் அல்லது சிம்ம ராசிக்காரர்களைப் போலல்லாமல், விருச்சிக ராசிக்காரர்களின் கோபம் கட்டுப்படுத்தப்படலாம், ஆனால் அவர்களின் கோபம் எவ்வளவு கட்டுப்படுத்தப்படுகிறதோ அவ்வளவு ஆபத்தானதாக மாறும். அவர்கள் கூர்மையான வார்த்தைகள் அல்லது திட்டமிட்ட செயல்கள் மூலம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த முனைகிறார்கள், மேலும் அவர்களின் கோபம் அனைவருக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம்.
தனுசு
குருபகவானால் ஆளப்படும் தனுசு ராசிக்காரர்கள் அவர்களின் நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் அந்த நேர்மை அவர்கள் கோபமாக இருக்கும்போது கத்தி போல கூர்மையானதாக மாறும். அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லத் தயங்க மாட்டார்கள், மேலும் விரக்தியின் தருணங்களில், அந்த வெளிப்படையான தன்மை கடுமையானதாகவோ அல்லது இரக்கமற்றதாகவோ தோன்றலாம்.
அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது நேர்மையற்ற தன்மையை எதிர்கொள்ளும்போதோ அவர்களின் கோபம் பெரும்பாலும் வெடித்துச் சிதறும். தனுசு ராசிக்காரர்கள் விரைவாக கோபப்படலாம் என்றாலும், அவர்கள் எதிர்மறை ஆற்றலை பரப்புவதை விரும்புவதில்லை, மேலும் அவர்களின் கோபம் தணிந்தவுடன் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












